தொண்டு என்பது பொதுமக்களுக்கு தன்னலமின்றி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படும் சேவைகள். அதற்கு கூலி தொண்டர்களின் மனமகிழ்ச்சி ஒன்று தான். மாறாக, பட்டமும் பதவிகளும் அல்ல.
பேதுருவைப் போல வருந்தி வருவோரை கைத்தூக்கிவிட்டு, பணியில் அமர்த்துகிறவர் ஆண்டவர் இயேசு என்பதை மனதில் கொள்வோம். இயேசுவின் இறைமக்களை அன்பு செய்து பெணிகாக்க அவருக்கு பணியாளர்கள் தேவை.
நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில், அவர் தனது தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல, நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம்.
இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.
‘இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’ (திப. 4:12) எனும் பவுல் அடிகளின் படிப்பினையின் உண்மையை அறிந்து வாழ்வோம்.
இயேசு எவ்வாறு, தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவரை அன்பு செய்தாரோ, நாமும் இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வம் காட்டுவோம். நிலைவாழ்வு நமதாகும்.