ஒரு காலத்தில் தனது மறையுரைகள், மற்றவர்கள் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதில் அதிகம் கவனம் செலுத்தியதாக அருட்தந்தை ஜோர்டன் நினைவுகூர்ந்தார். அப்போது ஒரு சகோதரர் அவரிடம், “கடவுளே, நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்பதற்குப் பதிலாக, “கடவுளே, நீர் என்னிடம் என்ன சொல்கிறீர்?” என்று கேட்குமாறு அறிவுறுத்தினார்.