வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மேய்ப்புப்பணி சூழல்களிலிருந்து வந்துள்ள பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே பொதுவான பணியால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய கர்தினால் ஃபெர்ராவ் அவர்கள், “இயேசு கிறிஸ்துவின் அன்பை டிஜிட்டல் உலகிற்கு எடுத்துச் செல்வதும், மக்கள் வாழும், தொடர்புகொள்ளும், வாழ்வின் பொருளைத் தேடும், கேள்விகளை எழுப்பும் இடங்களில் திருஅவையை உடனிருக்கச் செய்வதுமே” அந்தப் பணி என்று தெரிவித்தார்.