நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
நமது நோன்பு:
1.நம்மை கடவுளோடு ஒன்றிக்க வேண்டும் (இறைவேண்டல்);
2.நமக்குள் அமைதி கொண்டு வரவேண்டும் (நோன்பு);
3.மற்றும் பிறரோடு நம்மை ஒன்றிக்க வேண்டும் (தர்ம செயல்கள்)
தவக்காலத்தில் பழையன கழிதல் வேண்டும். இல்லையேல் அனுசரிக்கும் தவக்காலம் பொருளற்றது. இந்த தவக்காலத்தில் நமது தேடல் வழக்கத்திற்கு மாறாக, பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்கிறார் இயேசு.
உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
நல்ல பெற்றோராக இருந்து, தன்னுடைய குழந்தைக்கு செய்ய வேண்டிய மறை கூறித்த காரியங்களை மரியாளும், வளனாரும் செய்து கொடுத்தது போல, இன்றைய காலச் சூழலில் பெற்றவர்கள் செய்து கொடுத்து வருகின்றோமா? என்கின்ற வினாவோடும் பங்கேற்பது சிறப்பானது.