நீங்கள் மோசேயை நம்பினால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஏனென்றால் அவர் என்னைப் பற்றி எழுதினார். ஆனால் அவர் எழுதியதை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்வதை எப்படி நம்ப முடியும்?
“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது."
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.