முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை.
ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
உழைக்க மனமில்லாதவர்கள் உணவு உண்பது எப்படி சாத்தியமாகும்? உழைப்பை தவிர நம்மை உயர்த்துவது எதுவுமில்லை என்பதை உணர்த்தும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.