உறவுப்பாலம்

  • மகிழ்ச்சியானதே

    May 24, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு. 1 கொரிந்தியர் 15-43,44. நீதிமான் நம்பிக்கையோடுகூட உலகை விட்டு கடந்து போகிறார். அவருக்கு ஒரு மகிமையான விண்ணக வாழ்வு பற்றி எதிர்பார்ப்புண்டு.
  • ஆண்டவரோடு பேச

    May 24, 2020
    கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். திருப்பாடல்கள் 63.1-2.
  • விடியலில் உம்மை

    May 23, 2020
    இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1 தெசலோனிக்கர் 5-17. நாம் வேண்டுகிற ஜெபம் கிடைக்க தாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து இடைவிடாது ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் ஆண்டவர்கிட்ட கேட்டால் நிச்சயமாக அது நமக்கு கிடைக்கும். இல்லையெனில் அவர் வேறு ஒன்றை அதை விட நல்லதாக தருவார்.
  • வாக்கின்படி இருந்தது

    May 22, 2020
    அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார் - 2 அரசர்கள் 4-43. ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது இறைவாக்கினர் எலிசாவின் குழுவினருக்கு பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்தார். எலிசா, “மக்களுக்கு உண்ணக் கொடு” என்றார்.
  • இணைந்து இருப்போம்

    May 21, 2020
    முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார் - மத்தேயு 19-30. ஆண்டவர் நம்மை அழைத்துள்ளார். நிறைவாக ஆசீர்வத்திதுள்ளார். அதனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நாம் இருக்க கூடாது. நாம் அழைத்த அழைப்பில் நிற்காமல் வழி தவறினால் நிச்சயமாக நாம் பின் தள்ளப்படுவோம். ஆண்டவர் முதலில் சவுல் அரசரை அரசராக்கினார். அபிசேகம் பண்ணினார். ஆனால் சவுல் ஆண்டவருடைய வார்த்தையை விட்டு வழி மாறுகிறார். எனவே ஆண்டவர் சவுலை விட்டு தாவீதை தேர்ந்தெடுக்கிறார்.
  • நம்மை அழைக்கிறார்

    May 19, 2020
    நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது - விடுதலைப் பயணம் 18-18. இந்த உலகத்தில் குடும்ப பாரம், பிள்ளைகளைப் பற்றிய கவலை, கடன் என எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களால் நாம் சோர்ந்து போகிறோம். அவை நம் மன அமைதியை கெடுக்கிறது.
  • ஆசீரோடு வாழ

    May 18, 2020
    அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார் - தொடக்க நூல் 32-26. நம்மில் சிலர் ஆண்டவருடைய இரக்கத்தின் படி ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிலர் போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆண்டவர் தாமாகவே வந்து மகிழ்ச்சியோடு தரும் ஆசீர்வாதங்களுமுண்டு. நாம் கேட்கும்போது கொடுப்பதற்கென்று அவர் தன்னிடம் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களுமுண்டு.
  • நன்றி சொல்ல

    May 17, 2020
    ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் - யாக்கோபு 4:10. ஆண்டவருக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேஉறவுப்பாலம்/நன்றி-சொல்லண்டும். சமயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவருக்கென்று ஒரு சமயத்தை ஒதுக்க வேண்டும்.
  • அசைவுறாது

    May 14, 2020
    மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் - எசாயா 54:10. மலைகள் எவ்வளவு உறுதியானவை. அதை யாராவது நகர்த்தி இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியுமா. இல்லை அவைதான் தானே இடம் மாறி செல்லுமா.
  • உம் அன்பை

    May 13, 2020
    பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள் - மத்தேயு 12:7. நாம் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். வீட்டில் மாமியார் மாமனாருடன் சண்டை போட்டு அவர்களை மனம் நோக செய்துவிட்டு பெற்றோர்களை கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் விட்டு விட்டு, நாம் கொடுக்கும் காணிக்கைகள் ஆண்டவருக்கு உகந்ததல்ல என்று ஆண்டவர் கூறுகிறார்.
  • நம்முடைய நம்பிக்கை

    May 12, 2020
    நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை - எபிரேயர் 11:1. ஆண்டவர்மீது நாம் வைத்துள்ள நமபிக்கை என்பது உறுதியாக இருக்கவேண்டும். அவை நம் கண்ணுக்கு தெரியாத போதும் அதற்கான அடையாளங்கள், வழிகள் எதுவும் தென்படாத போதும் சந்தேகமற்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
  • நம்பிக்கை கொண்டு

    May 10, 2020
    ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் - திருப்பாடல்கள் 55:22. நம் கவலைகளை முற்றிலும் ஆண்டவர் பாதத்தில் ஒப்படைத்திடவேண்டும். பிறகு அதை பற்றி நினைத்து கொண்டு இருக்க கூடாது. அவர் தன் பிள்ளைகள் அழிவை காண விடமாட்டார்.
  • அறனும் அடைக்கலமும் அவரே

    May 10, 2020
    "நானோ உமது ஆற்றலை புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அறனும் அடைக்கலமுமாய் இருந்தீர்" - திருப்பாடல்கள் 59:16. இன்றைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் தான் நாம் நேற்றைய இரவில் தூக்கத் தொடங்கினோம்.
  • நம் துன்பங்களின் வெளிப்பாடு

    May 08, 2020
    இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன் - உரோமையர் 8:18. கழுகு தன 40 வது வயதில் மலை உச்சிக்குச் சென்று, தன் அலகுகளைக் கூர்மையாக்கி, தன் சிறகுகளைத் தானே பிடுங்கி, புது சிறகுகள் வளர வழி செய்யும்.
  • பிறரிலே இறைவனைக்கான

    May 07, 2020
    "எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்" - நீதிமொழிகள் 8:17. இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக அவரையும்,நம்மை நாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய அழைக்கின்றார். இறைவன் வாழும் ஆலயமான மனிதரை அன்பு செய்யாமல், பேராலயங்களில் இயேசுவை தேடி பயனில்லை.
  • நிழலாய் இருப்பவரே

    May 06, 2020
    உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் - திருப்பாடல்கள் 91:1. ஆண்டவர் நமக்கு நிழலாயிருக்கிறார். உன்னதரின் நிழல் உலகம் தராத அமைதியை நமக்கு தரும். "தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார்." என்று இறைவாக்கினர் ஏசாயா கூறுகிறார்.
  • நம்மை காக்கும் கடவுள்

    May 06, 2020
    ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! - திருப்பாடல்கள்121:5. ஆண்டவர் நம்மை காக்கிறவர். அவர் கடைசிவரை பாதுகாக்கிறவர். அவர் இரக்கமும் அன்பும் உடைய கடவுள். நோயின் படுக்கையின் நேரத்திலும், போராட்டத்தின் மேல் போராட்டம் வந்து, அவற்றால் அமிழ்ந்து போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் கவலை பட வேண்டாம். ஆண்டவர் நம்மை காப்பார்.
  • வழி நடத்தும் இறைவன்

    May 04, 2020
    நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? - எரேமியா 32:27. ஆண்டவர் அதிசயமாய் வழிநடத்துகிறவர். எகிப்து நாட்டிலே பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள் என கட்டளை இடுகிறான். இந்த கட்டளையினால் வந்த வேதனையை ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசீர்வாதமாய் மாற்றினார். எந்த இடத்திலிருந்து கடுமையான சட்டம் பிறந்ததோ, அதே இடத்திலிருந்து பாசமான வார்த்தைகள் வரும்படி செய்தார்.
  • ஆண்டவரோடு நாம் இருந்தால்

    May 03, 2020
    உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார் - செப்பனியா 3:17. ஆண்டவரை அதிகாலையில் தேடுவோம். அவரை அன்பு செய்வோம். அவருக்கு விருப்பமான வாழ்வு வாழ்வோம். அப்படி நாம் செய்தால்...