இது உரோம் அருகில் உள்ள ஒரு இரயில் நிலையத்தில் நடந்தது.மிஷினில் டிக்கெட் எடுக்க தடுமாறி, பெரியவரின் உதவிபெற்ற அந்த நபரும், அந்த பெரியவரும், நானும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையையும் அதற்கான மிகத் தெளிவான விளக்த்தையும் நமக்குக் கூறுவதை நாம் வாசிக்கிறோம். விதை கடவுளின் வார்த்தை என்பதும், அவ்வார்த்தைகளைக் கேட்கின்றவர்களின் வேறுபட்ட மனநிலைகளும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாம் இறை திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது தூய ஆவியார் நம்மிடம் குடி கொள்வார். அப்பொழுது அவர் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் ஆற்றலும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அத்தகு ஆற்றலை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள இறை திருவுளத்தை அறிந்து செயல்படும் ஞானத்தையும் அருளையும் வேண்டுவோம்.
கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?
கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை. பகிர்வு என்பது சிறுவயதில் இருந்தே வரக்கூடிய பண்பாகும். அதனை நம் பிள்ளைகளின் மனதில் விதைப்போம். நாளை அது வளர்ந்து மரமாகி அனைவருக்கும் பயன் தரும்.
நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
வழக்கமான திருவிவிலிய வாசிப்பு என்பது நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். இந்த தினசரி திருவிவிலிய வாசிப்புத் திட்டம், 180 நாட்களில் நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது, கடவுளுடைய வார்த்தையின் நிலையான உணவின் அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு வழங்கும்.
கடவுளுடைய திட்டத்தை கபிரியேலின் வார்த்தைகள் வழியாகக் கேட்டவுடன் மரியா கலங்கினார் என நாம் வாசிக்கிறோம். கடவுளின் விருப்பம் நம்மைக் கலங்கடிக்கக்கூடியதா? பயமுறுத்தக் கூடியதா?
நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார். இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?