“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்று நேரடியாகத் திட்டுகிறார்.
அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும் என்பதை நினைவில் கொள்வோம். அப்போது, கடவுளின் கடைக்கண் பார்வையால் 'பேறுடையவர்' என நாம் போற்றப்படுவோம்.
“என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது” என்பதை ஏற்று, மனதோடு முழங்கியவாறு, அவரை நாடி வருவோம், .நம்மை நல்வழிபடுத்துவோம்... அவரது ஆற்றலிலும் குணப்படுத்துதலிலும் நம்பிக்கை கொள்வோம்.
நம்முடைய அன்பான தந்தையாம் கடவுள் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது இத்தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்படும் செய்தியாகும். இரு கரங்களையும் விரித்தவராக அவர் காத்திருக்கிறார்.
நம் துன்பக் காலங்களில் நம்மை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர் அல்ல நம் கடவுள். உடுக்கை இழந்தவன் கைபோல (உடுத்தியுள்ள வேட்டி அவிழ்ந்து விழும்போது) உதவிக்கு வருபவர் போல நம் கடவுள் இருப்பார் என்பதை ஏற்று அவரோடு ஒப்புரவாகி ஒன்றிப்போம். ஏனெனில் அவரே நமது அடைக்கலப் பாறை.
நல்ல கிறிஸ்தவ இம்மை வாழ்வுக்கு நம்மை பயிற்றுவிக்கும் காலம். இன்பகரமான மறுமை வாழ்வுக்கு அடித்தளமிடும் உன்னத காலம். இன்று மனமாற்றத்திற்கு அழைக்கிறது இக்காலம்..
இத்தவக்காலப் பயணத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நாம், இறைப்பணியில் துன்பத் துயரங்களைச் சந்திக்கும் துணிவு மிக்கவர்களாக விளங்க அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை.
ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
நமது நோன்பு:
1.நம்மை கடவுளோடு ஒன்றிக்க வேண்டும் (இறைவேண்டல்);
2.நமக்குள் அமைதி கொண்டு வரவேண்டும் (நோன்பு);
3.மற்றும் பிறரோடு நம்மை ஒன்றிக்க வேண்டும் (தர்ம செயல்கள்)
தவக்காலத்தில் பழையன கழிதல் வேண்டும். இல்லையேல் அனுசரிக்கும் தவக்காலம் பொருளற்றது. இந்த தவக்காலத்தில் நமது தேடல் வழக்கத்திற்கு மாறாக, பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்கிறார் இயேசு.