“பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்
முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை எனப்படுகிறது. முன்மதி எனபது எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி. இந்த உவமையில் இயேசு ''விளக்கு'' எனும் ஒரு பொருளைப் பயன்படுத்துகிறார்.
திருமுழுக்கு யோவான், வெளிப்படையாக ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' என அறிவுறுத்தினார். இதன் வழியாக புனித பவுல், ஏரோதுவை கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ அழைக்கிறார். இதற்காகவே, தன் உயிரையும் தந்தார்.
திருத்தூதர்களின் அயரா உழைப்பில் நம்மை வந்தடைந்தத் திருஅவையில் இணைத்துள்ளோம். ஆகவே, அவர்களின் பணியைத் தொடரவும், அவர்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து திடம்பெறவும் பணிக்கப்படுகிறோம். இதையே இன்று திருத்தூதரான புனித பர்த்தலமேயு நினைவூட்டுகிறார்.
“அன்பில்லாதவர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்” என்கிறார் புனித (1 யோவான் 4:8) ஆம், அன்பை அன்பு கொண்டுதான் அறிய முடியும். ஆகவே இறைவன்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த நாம் அன்புமயமானவர்களாக மாறுவோம்.
கடவுள் அவர்களில் புதிய ஆவியைப் பொழிவார் என்பது, கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதற்கான புதிய மனநிலை அல்லது அணுகுமுறையை அருளவுள்ளார் என்று பொருள்கொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு குறிப்பிடும் நிலக்கிழார் எவ்வளவு வித்தியாசமானவர். ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு நியாயமானதை மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல், கடைசி மணி வரை வேலை தேடி தம்மிடம் குறைந்த நேரம் வேலை செய்தவருக்கும் அதே ஊதியத்தைக் கொடுக்கிறார்.
இயேசுவின் சீடர் என்பது எளிமைக்குரியவர். இங்கே எளிமை என்று நான் கூறியது தோற்றம் மட்டுமல்ல மாறாக, நடத்தை. ‘எளிமையாக வாழ்ந்து என்னத்த சாதித்துவிட்டாய்?’ என்று சிலர் கேட்கலாம். எளிமையாக வாழ்வதே ஒரு சாதனை என்று நமது பதில் இருந்தால் அதற்கான வெகுமதியை ஆண்டவர் அளிப்பார். இந்த மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் காணலாம்.
“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்கின்றார். இயேசுவின் முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இளைஞர் வந்த வழி போகிறான்.
அவர் செவிசாய்க்காவிடில், உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போய் பிரச்சனையைப் பேசி முடிக்கப்பாருங்கள் என்றும், அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருஅவையின் உதவியை நாடுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
கடவுளின் வார்த்தையை எடுத்துக்கொண்டு அதை நம்மில் ஒரு பகுதியாக மாற்றுவது எவ்வளவு இனிமையானது என்பதை இன்றைய பதிலுரைப் பாடலில் கேட்கிறோம். அது தேனை விட இனிமையானது என் விவரிக்கப்படுகிறது.
அன்பு இயேசுவே, நான் போராடும் போதெல்லாம் உம்மேல் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையால் என்னை நிரப்புவதோடு, வரி செலுத்துவதில் நான் நேர்மையாக இருந்திடவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
புனித லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நம்மால் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக நமது சொத்து, செல்வங்களை ஏழைகளோடு பகிர முன்வர இயலுமா? அதற்கான மனம் நம்மில் உள்ளதா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
மெசியா என்று அறிக்கையிட்ட சீமோனிடம் விண்ணகத்தந்தையே இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் என்றதோடு, அவரது சீமோன் என்ற பெயரை பேதுரு (பாறை) என்றும் அந்தப் பாறையின் மேல் இயேசு தனது திருஅவையைக் கட்டுவார் என்றும் மொழிகின்றார்.
இயேசுவுக்கு நல்லதொரு பதிலாக, “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றாள் அந்த தாய்.
இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது என்று அவளது மன்றாட்டை ஏற்றார்.