companionpriest

  • என் ஆற்றலே

    Aug 27, 2020
    எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்

    இணைச் சட்டம் 8-17.
  • என் பெயரால்

    Aug 26, 2020
    நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
    நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
    யோவான் 14: 13 14
  • செவி கொடுப்பேன்

    Aug 25, 2020
    நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்!

    அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.
    எரேமியா 29 12
  • உற்று நோக்கு

    Aug 18, 2020
    அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.

    எண்ணிக்கை 21-8.
  • என்னோடு இருப்பவரே!

    Aug 17, 2020
    பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;

    எண்ணிக்கை 22-18.
  • அதிசயமாக

    Aug 16, 2020
    “கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள் “என்றார்

    எண்ணிக்கை 20-8
  • என்னைத் தாங்குபவரே

    Aug 15, 2020
    நீ அறிவிக்க வேண்டியது; ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது.

    லேவியர் 4-2.
  • அடையாளம்

    Aug 13, 2020
    இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்” என்றார்.

    விடுதலைப் பயணம்31-17.
  • தூய ஆவியே என் ஆருயிரே

    Aug 10, 2020
    வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.

    விடுதலைப் பயணம் 23-20
  • பேறுபெற்றோராக

    Aug 05, 2020
    என் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
    திருப்பாடல் 23: 5
  • அன்பின் ஆண்டவரே

    Aug 03, 2020
    நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

    விடுதலைப் பயணம் 20-2,6
  • என் நம்பிக்கையே

    Aug 01, 2020
    காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி விதித்துள்ளது.
    எசாயா 9:1
  • அவருக்கு செவிசாய்க்க

    Jul 27, 2020
    அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.

    விடுதலைப் பயணம் 15-22.
  • அழைக்கின்ற இறைவன்

    Jul 24, 2020
    அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். “மோசே, மோசே” என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.

    விடுதலைப் பயணம் 3-4
  • உருவாக்கும் இறைவன்

    Jul 22, 2020
    நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.

    தொடக்க நூல்50-20.
  • ஆண்டவரே பேசும்

    Jul 19, 2020
    அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். “நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்; அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்” என்றார்.

    தொடக்க நூல் 37-9.
  • திட்டமிட்டு ஆண்டவரே

    Jul 18, 2020
    கடவுள் அவரை நோக்கி, “நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.

    தொடக்க நூல் 35-11.
  • உம் கரத்தில்

    Jul 17, 2020
    ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.

    தொடக்க நூல் 33-4.
  • உன்னோடு நான் இருப்பேன்

    Jul 16, 2020
    நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫