அன்னை மரியாவை நம்புங்கள், அவருடைய அரவணைப்பு பெரும்பாலும் உங்கள் திருப்பயணங்களின் இலக்காகும் என்றும், ஒவ்வொருவரும் கொண்டு வரும் உழைப்பு, வேதனைகள், வலிகளை அன்னையின் காலடியில் கிடத்தவும் அவரைப் பற்றி சிந்திக்கவும், தொடர்ந்து மரியாவை நாடித்தேடுங்கள் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பங்கள், நாடுகள், திருஅவைச் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கிடையே ஓர் உறவு பலமாக விளங்குகிறீர்கள் என்றும், எல்லோருக்கும் உங்கள் இதயங்களின் கதவுகளைத் திறந்து வைத்திருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒன்றாகக் கனவு காணுங்கள், அனைவராலும் உருவாக்கப்பட்ட சமூகத்தில் சகமனிதர்களாகப் புதிய கனவு காணும் அனைவரரையும் மனித மாண்புடன் நடத்துங்கள் என்றும், என் வாழ்வைப் பிரதிபலிக்கும் பலரைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருவரின் தோலின் நிறம், சமூக அந்தஸ்து, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் நமக்கு அடுத்திருப்போரே என்பதை மனதில் கொண்டு வாழ்வோம் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் சார்பு, தேசியம் அல்லது சமுதாயம், உடைமைகள், பிறப்பு என எந்த ஒரு அடிப்படையிலும் மனிதர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது.
பகைமையால் சிறைவைக்கப்பட்டு, மோதல்களுக்கு காரணமாக இருக்கும் இதயங்களின் மனமாறலுக்கு அமைதியின் அரசியாம் அன்னை மரியா உதவவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த அக்டோபர் 9 திங்கள்கிழமையன்று நடைபெற்ற உலக ஆயர் பேரவையின் 16 ஆவது உலக ஆயர் மாமன்றமானது அக்டோபர் மாதம் 4 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெற்று வருகிறது.
இந்திய கர்தினால் டெலெஸ்போர் பிளாசிடஸ் டோப்போ இந்தியாவின் முதல் பழங்குடியின கர்தினால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி முன்னாள் பேராயர் (84), அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணிக்கு ராஞ்சி, மாந்தர், கான்ஸ்டன்ட் லீவன்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
தென்னிந்தியாவின் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமமான வாச்சாத்தியில் 1992 ஆம் ஆண்டு சந்தன மரக்கட்டைகளை கடத்தியதாக 18 பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 215 அரசு அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை ஆணையம் வரவேற்றுள்ளது.