ஒவ்வொருவருடைய செபமும் ஆதரவும் நற்செய்தியைப் பரப்ப உதவும், மேய்ப்புப் பணித் திட்டங்களை வழங்க உதவும், புதிய ஆலயங்களைக் கட்ட உதவும் மற்றும் மறைபரப்பு நாடுகளில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் பேருதவியாக இருக்கும் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
"வண்ணங்களில் ஒரு புதிய உலகம்". கலை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, சமூகத்தில் மதிப்புகளையும் நம்பிக்கையையும் உருவாக்கும் ஒரு தொழிலும் என்பதை வலியுறுத்தினார்.
தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
“ஒரு சகப் பயணியாக” இருக்க உறுதியளித்தார். “இதுவே எனது விருப்பம்: ஆளுவதற்கு மட்டுமல்ல, கேட்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், சேவை செய்வதற்கும் உங்கள் ஆயராக இருப்பது,” என்று அவர் கூறினார்.
“இயேசு அழைத்தபோது, அவருடைய சீடர்கள் உடனேசென்றார்கள். இன்று இயேசு நம்மை அழைத்தால், நம்மில் எத்தனை பேர் அவருடன் செல்லத் தயாராக இருப்போம்?” என்ற கேள்வியோடு அனைவரையும் சிந்திக்க அழைத்தார்.
செப வழிபாடு தொடங்கி நூறு நாள் ஆனது... இருநூறு நாள் ஆனது... ஓராண்டும் நிறைவுப் பெற்றது.... 550 வது நாள் கொண்டாட்டமும் முடிந்தது.... தற்போது 4 ஆண்டுகளை கடந்து ஆயிரமாவது நாளை எட்டிப்பிடித்து, ஆயிரத்து ஐநூற்று ஐம்பதாவது நாளை ஆகஸ்டு 23 அன்று தொட்டு மகிழ்ந்து, தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து வருவது இக்குழுவின் மாபெரும் சாதனை.
செப வழிபாடு தொடங்கி நூறு நாள் ஆனது... இருநூறு நாள் ஆனது... ஓராண்டும் நிறைவுப் பெற்றது.... 550 வது நாள் கொண்டாட்டமும் முடிந்தது.... தற்போது 4 ஆண்டுகளை கடந்து ஆயிரமாவது நாளை எட்டிப்பிடித்து, ஆயிரத்து ஐநூற்று ஐம்பதாவது நாளை ஆகஸ்டு 23 அன்று தொட்டு மகிழ்ந்து, தொடர்ந்து ஜந்தாம் ஆண்டு நோக்கி செபித்து வருவது இக்குழுவின் மாபெரும் சாதனை.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், உடனடி உதவி வழங்கப்படாவிட்டால் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்து வயதுக்குட்பட்ட குறைந்தது 132,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசரமாக ஊட்டச்சத்து ஆதரவு தேவைப்படும் 55,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களையும் ஐபிசி எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் பஞ்சம் நிலவுவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது இதுவே முதல் முறை.