மன நிறைவு...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.07.2024

நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்குப் பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.

அத்தோடு, இல்லாததை நினைத்து பலநேரங்களில் வருந்திக்
கொண்டிருக்கிறோம்.

அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்.

இருப்பதை வைத்து நிறைவு அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தப்படாமல் வாழும் மனமுள்ளவர்கள் எவரோ,

அவரே நோயற்ற நிலையுடன் நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன்
வாழ்வார்கள்.

நீங்கள் விரும்பக் கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால் கிடைத்த வாழ்க்கையை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.

அது, வாழ்க்கையில் மன நிறைவையும், அமைதியையும் ஏற்படுத்தும்  இவற்றை நாம் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி