“பசுமைப் பயணம்" -இயற்கையை காக்க தொடரும் இரண்டாம் நாள் பயணம் . | Veritas Tamil
இயற்கையை காக்க தொடரும் பயணத்தில் இரண்டாம் நாள் ஆனது நேற்று தொடங்கியது முதலில் கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் தொடக்க விழாவானது தொடங்கியது அதில் அருள்பணி சகோதரர் விக்டர் அவர்கள் கருத்துரை வழங்கினார்.அருள் சகோதரி பிலோ அவர்கள் பசுமை பயணத்தின் முக்கியத்துவத்தை பற்றி கூறிவிட்டு கொடியை அசைத்து பசுமை பயணத்தை துவங்கி வைத்தார் .

இந்த பசுமை பயணத்தில் இக்னேஷியஸ் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அருள் சகோதரிகள் இந்த பசுமை பயணத்தில் பசுமை வீரர்களுடன் இணைந்து தாமிரபரணி ஆற்றை நோக்கி பயணம் செய்தனர். சுமார் ஒன்பதரை மணி அளவில் பசுமை பயண வீரர்கள் அனைவரும் தாமிரபரணி ஆற்றின் அருகே வந்தடைந்தனர். அங்கு பனைமரம் நடுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது அதில் தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். இக்னேஷியஸ் மாணவிகள் பறையாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர் அதை தொடர்ந்து அனைவரும் பனை விதைகளை விதைத்தனர்.

அதைத் தொடர்ந்து பேராயர் இல்லத்திற்கு பசுமை பயணம் வீரர்கள் தன்னார்வலர்கள் மாணவியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வந்தடைந்தனர். அங்கு மரம் நடுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்து ராஜா பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்னேஷியஸ் பள்ளி மாணவர்கள் இவர்கள் அனைவரும் தங்கள் கலைகள் மூலம் இயற்கை பற்றி விழிப்புணர்வை தந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பசுமை பயண வீரர்களான AICUF மாணவர்கள் இயற்கையை நாம் எப்படி சுரண்டுகிறோம் அதை எப்படி அழித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை பற்றி விழிப்புணர்வு வீதி நாடகமானது நடித்துக் காட்டினர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மரம் நடுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது மாணவர்கள் அருள் தந்தையர் அருள் சகோதரர்கள் மற்றும் பசுமை பயண வீரர்கள் அனைவரும் மரங்களை நட்டனர். அதைத்தொடர்ந்து 2.45 மணி அளவில் பசுமை பயண வீரர்கள் அனைவரும் தூத்துக்குடியை நோக்கி இயற்கை காக்கும் பயணத்தை தொடர்ந்தனர்...... செல்லும் வழியில் விதை பந்துகளை போட்டு கொண்டு சென்றனர் மாலை 5 மணி அளவில் பசுமை பயண வீரர்கள் சென்மேரிஸ் பாய்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் தூத்துக்குடியில் சென்றடைந்தனர் அங்கு அருள்தந்தை சிங்கராயர் பசுமைப் பயண வீரர்களை பள்ளி மாணவர்களுடன் பறையிசை முழங்க வரவேற்றார்
அதன் பிறகு பசுமை பயண வீரர்களுக்கு அறிமுக உரை சிங்கராயாரால் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து பறை இசைக்கலைஞர்கள் தங்களது நடனத்தை ஆடினர் அதனைத் தொடர்ந்து ஒரு விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது பிறகு பசுமை பயண வீரர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இயற்கை காக்கும் பயணத்தில் இரண்டாம் நாள் ஆனது நிறைவுற்றது. வாழ்வை காக்கும் பயணமானது இன்று மதுரையை நோக்கி தொடரும்...