கடவுளின் அருட்கருவிகளாய்… | Veritas Tamil

 கடவுளின் அருட்கருவிகளாய்…
                         கடவுளின் அருட்கருவிகளாய்… 
                                                                      இருளில் ஒளியாய்...

பல துறவற சபை சகோதரிகள் ரோம் நகரில் கல்வி முடித்த பிறகு புதிய பணிகளை மேற்கொள்கிறார்கள்
வாடிகன் நகரம் 6 ஜூன் 2025 – சமீபத்தில் காஸ்டெல் காந்தோல்ஃபோவில் பேரானந்தமும் பணி உணர்வும் நிறைந்திருந்தது. ரோம் நகரில் உள்ள போந்திபிக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி முடித்த மத சகோதரிகள் தற்காலிக இல்லத்திற்கு விடை கொடுத்தனர். மறுபரிவர்த்தனை துறையின்  உதவித் தொகைகளின் மூலம் பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த சகோதரிகள் போந்திபிக்கல் நகர்பற பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றனர்.

அருட்தந்தை லூயிஸ் அன்டோனியோ டாக்லே மறுபரிவர்த்தனை துறையின் துணைத் தலைவர் மற்றும் நகர்புற பெரிய மானியாளர் கொலேஜியோ மிஷனாரியோ "மேடர் எக்கிளேசியே" மையத்தில் நடந்த பிரிவுப் உபச்சார திருப்பலியை  நடத்தினார். பல்வேறு சபைசகோதரிகள் குழுக்களாக சேர்ந்திருந்த இவர்கள் ரோம் நகருக்கு தினமும் பயணம் செய்து கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வு சிலருக்கு சோகமானதாக இருந்தாலும் கொண்டாட்டம்இ நன்றி மற்றும் பணி உணர்வு நிறைந்திருந்தது. அருட்தந்தை டாக்லே தனது மறைஉரையில் மரியா மற்றும் எலிசபெத்தின் பைபிள் சந்திப்பை நினைவுபடுத்தினார்—இருவரும் கடினமான சூழ்நிலையில் கடவுளின் திட்டத்திற்கு திறந்த மனதுடன் இருந்தனர். "கடவுளின் அருளின் கருவிகளாக மாற மனித வரம்புகளை தூய ஆவி மாற்றுகிறது" என்று அவர் கூறினார். "கடவுளின் அன்பு மற்றும் இரக்கத்தின் சாட்சியாக இருங்கள்; இருளில் நடக்கும் உலகிற்கு ஒளியாய் விளங்குங்கள்" என்று அவர் சகோதரிகளை ஊக்குவித்தார்.

கொலேஜியோ இயக்குநர் சகோதரி ஜெனோவேபா குட்லிக் சகோதரிகள் தங்கள் உழைப்பிற்கும் வளர்ச்சிக்கும் பாராட்டு தெரிவித்தார். "கடவுளுக்கு நம்முடைய இதயங்களை திறந்தால் எதுவும் சாத்தியமே" என்று அவர் உறுதியாக கூறினார்.
கானாவில் இருந்து வந்த சகோதரி எவ்லின் அவோனா ஆறு ஆண்டுகள் ரோம் நகரில் மத அறிவியல் (இளங்கலை பட்டம் மற்றும் கத்தோலிக்க திருஅவையின் சட்டத்தில் உயர்கல்வி பட்டம் பெற்றார். "இந்த வாய்ப்பிற்கு நான் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கிறேன். என் சமூகத்திற்கும் மத குழுவிற்கும் மற்றும் திருச்சபைக்கு என் கல்வியைப் பயன்படுத்த ஆவலாக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

இந்த பிரிவுவிழா  ஒரு கல்விப் பயணத்தின் முடிவை மட்டும் குறிக்கவில்லை—இது மாற்றத்தின் கொண்டாட்டமாக இருந்தது. இந்த சகோதரிகள் அறிவில்இ விசுவாசத்தில்இ மற்றும் நட்பில் செழித்து புதிய பொறுப்புகளை துணிச்சலுடன் பணிவுடன் மற்றும் உறுதியாக ஏற்க தயாராக உள்ளனர். மறுபரிவர்த்தனை துறையின் நிலையான பணியை இவர்கள் பிரதிபலிக்கிறார்கள்—உலகின் ஒவ்வொரு மூலையிலும் நம்பிக்கை நீதி மற்றும் சேவையின் விதைகளை விதைப்பதற்காக தலைவர்களை உருவாக்க இது உதவுகிறது