குருத்துவ மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு | Veritas Tamil

ஜூன் 24 அன்று, யூபிலி ஆண்டை முன்னிட்டு குருத்துவ மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான கருத்தரகருத்தரங்கு நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். திருத்தந்தை லியோ XIV புனித பேதுரு பேராலயத்தில் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இயேசுவின் மதுரமான திரு இருதயம் மற்றும் குருத்துவ வாழ்வுக்கான அழைப்பை மையமாகக் கொண்ட ஒரு தியானத்தை நிகழ்த்தினார்.
தனது உரையில், திருத்தந்தை குருமடமாணவர்கள் அனைவரும் "திருப்பயணிகள் மற்றும் நம்பிக்கையின் சாட்சிகள்" என்றும் விவரித்தார். திருஅவைக்குள் இந்த நம்பிக்கையின் சுடரை உயிருடன் வைத்திருக்க அவர்களை வலியுறுத்தினார்.
அன்பான வரவேற்பு, நெருக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையின் மூலம், மகிழ்ச்சி, மென்மை மற்றும் கருணை என்னும் இயேசுவின் திருஇதயத்தை பிரதிபலிக்க அவர்களை அழைத்தார். இந்த உருவாக்கம், இறையியல் ஆய்வு மட்டுமல்ல, ஆழ்ந்த தனிப்பட்ட செபம் மற்றும் உள் பகுத்தறிவையும் உள்ளடக்கிய "இதயத்தை மையமாகக் கொண்டதாக" இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வலுவான உள்-வாழ்க்கையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை திருத்தந்தை எடுத்துரைத்தார். இதயத்தின் உள் இயக்கங்களை அங்கீகரித்து அமைதியாக கடவுளின் குரலையும் படைப்பு, கலை, இசை மற்றும் அறிவியலின் அழகையும் கூர்ந்து கவனித்தார்.
அவர் குருமடமாணவர்கள் அடிக்கடி ஜெபிக்க வேண்டும். தூயஆவிதூயஆவியின் துணையை நாட வேண்டும். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் இளைஞர்களின் தேவைகளை ஆழமாகக் கேட்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தனது வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பற்றி தியானிப்பதில் அன்னை மரியாளின் முன்மாதிரியிலிருந்து உத்வேகம் பெற்ற திருத்தந்தை "பகுத்தறியும் கலையை" வளர்த்துக் கொள்ள குருத்துவ மாணவர்களை ஊக்குவித்தார்.
மேலும், பாசாங்குத்தனத்தையும் மேலோட்டமான தன்மையையும் நிராகரிக்கவும், ஆளுமை முதிர்ச்சியில் வளரவும், மனத்தாழ்மையுடனும் ஆர்வத்துடனும் குருத்துவத் பணியை ஏற்கவும் அவர் அவர்களை அறிவுறுத்தினார்.
"ஒருபோதும் குறைவில் நிறைவு அடைய வேண்டாம். "வெறுமெனே பெறுபவர்களாக இராமல் குருத்துவ வாழ்க்கை குறித்து ஆர்வமாக இருங்கள். நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தை இறைவாக்கினர்களுக்குரிய இதயத்துடன் பாருங்கள்."
நைசீன் விசுவாசப் பிரகடனத்தில் குருத்துவப் பயிற்றுனர்களை வழிநடத்தி, அவர்கள் கிறிஸ்துவுடனான தங்கள் நட்பை ஆழப்படுத்தி, "உங்களுக்காகவும் மனிதகுலத்திற்காகவும் அன்பால் துடிக்கும் இயேசுவின் திருஇருதயத்தைப் பிரதிபலிக்க என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி தன் உரையை நிறைவு செய்தார்.
Daily Program
