புனிதம் தூரமில்லை | Veritas Tamil

புனிதம் தூரமில்லை...

புனிதம் தூரமில்லை என்ற தலைப்பில் இளையோர் ஜூபிலியைக் கொண்டாடிய கோவை மறைமாவட்ட இளையோர்

கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 2025ம் ஆண்டு ஜூபிலியை முன்னிட்டு கோவை மறைமாவட்டத்தில் இளையோர் ஜுபிலியாகச் சிறப்பித்தனர். புனித கார்லோ அகுடிஸ் வழியில் இளையோரை புனிதத்தை நோக்கிய பயணத்தில் வழிநடத்த. நற்கருணை மீது அதீத பக்தி கொண்ட புனித கார்லோ வழியில் நற்கருணையைக் கொண்டாடுகிற இளையோராய் வாழ இந்த இளையோர் ஜுபிலியாகக் கொண்டாடினர். அருட்தந்தை. ரோச், அருட்தந்தை. கிறிஸ்டோபர் இருவரும் திருப்பலியின் அர்த்தங்களையும், நற்கருணை வாங்குவதால் வரும் மேன்மையையும் நன்மைகளையும், ஆசீரையும் எடுத்துரைத்தனர்.  பின் இளையோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


      இந்த நிகழ்வுகளில் மறைமாவட்டம் முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 420 இளையோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடந்த நிகழ்வுகள்: காலை நற்கருணை துதி ஆராதனையில் தொடங்கி மாலை மேதகு. ஆயர் Dr. L. தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

 

கோவை ஆயரின் ஆசிரோடு ஜுபிலிக் கொண்டாட்டம் நிறைவுற்றது.

இந்த நாளில் இளையோருக்காக, ஒப்புரவு அருட்சாதனம் வழங்குதல், Counselling, தொடர் ஆராதனை, கலை நிகழ்ச்சிகள், உன்னைத் தேடி என்ற ஒலி ஒளி நாடகம், புனித கார்லோ அகுடிஸின் திருப்பண்டத்தோடு இளையோர் பவனி, திருப்பண்ட ஆசிர், ஆயர் தலைமையில், குருக்கள் குழாமோடு திருப்பலி, சுவைமிகு மதிய உணவு, ஜமாப் எனும் கோவை இசைக் கொண்டாட்டம் என இளையோர் ஜூபிலி ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. இளையோர் பணிக்குழு செயலர்.

அருட்பணி.ச.ஞானப்பிரகாசம் இதற்கான முழு ஏற்பாட்டையும் சிறந்த முறையில் செய்திருந்தார். இந்த நிகழ்வு இளையோர் மத்தியிலும், இறைமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.