இளைஞர்கள் அமைதியாகவும் நேர்மையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் | Veritas Tamil

கென்யாவின் கத்தோலிக்க ஆயர்கள்  வேண்டுகோள்

கென்யா முழுவதும் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், கென்யாவின் கத்தோலிக்க ஆயர்கள் கென்யாவில் குடிமக்களை குறிப்பாக இளைஞர்கள் அமைதியாகவும், நேர்மையாகவும், தைரியமாகவும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஜூன் 24 அன்று தேசிய அளவிலான போராட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், போராட்டக்காரர் போனிஃபேஸ் கரியுகியின் மரணம் உட்பட, நடந்து வரும் வன்முறை மற்றும் சமீபத்திய உயிர் இழப்பு குறித்து ஆயர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தனர். காவல்துறையினரால் மிக அருகில் இருந்து சுடப்பட்டதாகக் கூறப்படும் போராட்டக்காரர் போனிஃபேஸ் கரியுகியின் மரணம் இதில் அடங்கும். முன்னதாக வலைப்பதிவாளர் ஆல்பர்ட் ஓஜ்வாங் போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

"நமது நாட்டில் மனித உயிருக்கு கடுமையான அவமதிப்பு இருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்" என்று ஆயர்கள் கூறினர்கள். காணாமல் போனவர்கள் பற்றிய வரும் செய்திகள், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மிரட்டல்கள் பற்றிய அடிக்கடி வரும் அறிக்கைகள் வருத்தத்திற்குரியது. 

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை நினைவு கூர்ந்த ஆயர்கள்,  இவர்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல, உண்மையான மனிதர்கள். "சகோதரர்கள், சகோதரிகள், அருட்தந்தையார்கள், மகன்கள், மகள்கள் மற்றும் நண்பர்கள், அவர்கள் பாதுகாப்பு மற்றும் நீதிக்கு தகுதியானவர்கள்" என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.

கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியில்  Z தலைமுறை "((Generation Z) இளைஞர்களின் குரல்களைக் கேட்குமாறு அதிகாரிகளை ஆயர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

வன்முறை மற்றும் கையாளுதலை எதிர்க்க இளைஞர்களை அவர்கள் ஊக்குவித்தார்கள். "திருஅவை உங்களை நேசிக்கிறது மற்றும் கவனித்துக்கொள்கிறது" என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.