rva

  • அவருக்கான தேடல்

    Oct 09, 2020
    இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

    லூக்கா 17-17,18
  • முதல் அறிவுரை

    Oct 08, 2020
    அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.

    1 திமொத்தேயு 2-1.
  • எத்தனை ஆயிரம் காலத்து மருந்து இது?

    Oct 07, 2020
    இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான், இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள். எக்காலத்திலும் உதவும். இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன், தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
  • உம் துணையோடு

    Oct 07, 2020
    ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை’ ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.

    எசாயா 34 : 16
  • என் வழிகாட்டியே

    Oct 06, 2020
    மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.

    உரோமையர் 2-7.
  • வாரும் தூய ஆவியே

    Oct 03, 2020
    வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

    யோவான் 6-63.
  • யாரிடம் செல்வோம்?

    Oct 03, 2020
    சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

    யோவான் 6-68.
  • என் பங்கு

    Oct 02, 2020
    ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே, நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்

    புலம்பல்3-24.
  • உம் கரத்தில்

    Sep 28, 2020
    இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
    யோவேல் 2:27
  • நம்பிக்கையோடு

    Sep 23, 2020
    ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் - திருப்பாடல்கள் 55:22. நம் கவலைகளை முற்றிலும் ஆண்டவர் பாதத்தில் ஒப்படைத்திடவேண்டும். பிறகு அதை பற்றி நினைத்து கொண்டு இருக்க கூடாது. அவர் தன் பிள்ளைகள் அழிவை காண விடமாட்டார்.
  • அன்பு எப்படிப்பட்டது?

    Sep 23, 2020
    இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக

    எபேசியர் 3-18
  • ஜெபிக்கலாமா!

    Sep 22, 2020
    அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?

    மத்தேயு 26-40.
  • அவர் பெயரில்

    Sep 17, 2020
    இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது

    திருத்தூதர் பணிகள் 3-16.
  • உருவாக்கியவரே

    Sep 15, 2020
    வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

    திருப்பாடல்கள் 95: 6,7
  • களிமண்ணாக

    Sep 14, 2020
    சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை

    திருத்தூதர் பணிகள் 9-8.,9
  • நம்மோடு இருப்பவர்

    Sep 13, 2020
    என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

    என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

    திருப்பாடல்கள் 89-20.21
  • இரக்கம் காட்டி

    Sep 12, 2020
    படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

    திருப்பாடல்கள் 84-3.
  • நல்ல விதையாக

    Sep 09, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
    1 கொரிந்தியர் 15-43,44