சர்வதேச தீயணைப்பு படைவீரர்கள் நாள் | May 4

        1999 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக, உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் சர்வதேச தீயணைப்புப் படையினர் International Firefighters` Day (IFFD) நாள் பின்பற்றப்படுகிறது.
        பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. தீயணைப்புப் படையினர் சேவைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், அங்கீகாரத்தை வழங்கி, இவர்களுக்கு நன்றிகூறுவதே இந்நாளின் நோக்கம்.