செப்டம்பர் மாதம் புனிதர் பட்டம் பெரும் ஆசிர்வதிக்கப்பட்ட கார்லோ அகுடிஸ் மற்றும் பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாட்டி

ஆசிர்வதிக்கப்பட்ட கார்லோ அகுடிஸ் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட பியர் ஜியோர்ஜியோ ஃப்ராசாட்டி ஆகியோர் செப்டம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை, புனித கன்னி மரியாளின் பிறப்பு விழா அன்று  புனிதர் பட்டம் பெறுவார்கள் என்று திருத்தந்தை லியோ XIV அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜூன் 13, அன்று காலை அப்போஸ்தலிக்க அரண்மனையில் நடைபெற்ற சாதாரண பொதுக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலில் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் தனித்தனியாக திட்டமிடப்பட்டிருந்த இந்த விழாக்கள் - ஏப்ரல் 27 அன்று அகுடிஸ் மற்றும் இளைஞர் விழாவின் போது ஃப்ராசாட்டி - ஏப்ரல் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

திருத்தந்தை லியோ பதினான்காம், தீவிரமான நம்பிக்கை மற்றும் உலகளாவிய அளவில் மக்களை ஈர்த்தமைக்காக அறியப்படும் இரு இளைஞர்கள் — ஆசிர்வதிக்கப்பட்ட கார்லோ அகுடிஸ் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட பியர் ஜார்ஜியோ ஃபிரசாட்டி ஆகியோரை, ஜூபிலி (Jubilee) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்து புனிதர் பட்டத்துக்கு (Canonization) உயர்த்த தீர்மானித்துள்ளார்.

வேறு காலங்களிலும், வேறு சூழல்களிலும் வாழ்ந்தவர்கள் என்றாலும், இவர்கள் இருவரும் இன்றைய இளைஞர்களுக்கான வாழ்வின் முன்மாதிரிகளாகக் கருதப்படுகின்றனர். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பும், பிறருக்காக செய்த சேவையும் இவர்களுக்கு பெருமை சேர்க்கின்றன.

அதே பொது கூட்டத்தில், மேலும் ஏழு ஆசிர்வதிக்கப்பட்டவர்களை புனிதராக்கப்படுவதற்கான நாள், 2025 அக்டோபர் 19-ஆம் தேதி என திருத்தந்தை அறிவித்தார்.

2025 அக்டோபர் 19-ஆம் தேதி, புனிதர் பட்டத்துக்காக உயர்த்தப்பட உள்ள மற்ற ஆசிர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியல்:

  • இஞ்ஞாசியுஸ் ஷூகரல்லா மலோயான், ஆர்மீனிய கத்தோலிக்க பேராயர் மற்றும் 1915  இனப்படுகொலையில் மரித்த இஞ்ஞாசியுஸ் ஷூகரல்லா மலோயான்.
  • பீட்டர் டோ ரோட், பப்புவான் பொதுநிலை மறைகல்வியாளர், 1945 இல் ஒரு சாதாரண மத போதகராக மரித்தவர்.
  • விசென்சா மரியா போலோனி, வெரோனாவின் இரக்கம் மிக்க சகோதரிகள் (Sisters of Mercy of Verona) சபையின் நிறுவுனர்.
  • மரியா டெல் மொந்தே கார்மெலோ ரெண்டிலெஸ் மார்டினெஸ், இயேசுவின் ஊழியர் (Servants of Jesus) சபையின் நிறுவுனர்.
  • மரியா ட்ரொங்காட்டி, மரியாள் உதவியாளர் மகள்களின் சபையை சேர்ந்தவர்.
  • ஹோசே கிரெகோரியோ எர்னாண்டஸ் சிஸ்னேரோஸ், “எளிய மக்களின் மருத்துவர்” என புகழப்படும் வெனிசுவேலாவைச் சேர்ந்த மருத்துவர்.
  • பர்தோலோ லொங்கோ, இத்தாலியிலும் உலகெங்கிலும் மதிப்பிடப்படும், பாம்பேயியின் அன்னை மரியாவின் புனித ஆலயத்தை (Shrine of Our Lady of Pompeii) நிறுவியவர்.

அக்டோபர் 19-ஆம் தேதி புனிதர் பட்டம் பெறுவோரில் ஹோசே கிரெகோரியோ எர்னாண்டஸ் எளிய மக்களின் மருத்துவர்” என புகழப்படும் வெனிசுவேலாவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் பர்தோலோ லொங்கோ போம்பெய் அன்னை ஆலயத்தின் பிரியமான நிறுவனர் ஆகியோர் பொதுநிலையினர் ஆவார்கள்.