அதிசயமாக

“கோலை எடுத்துக் கொள்; நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்; அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்; இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்; மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள் “என்றார்

எண்ணிக்கை 20-8

ஆண்டவர் பாலைவனத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க மோயீசனிடம் பாறை கிட்ட பேசு . தண்ணீர் கிடைக்கும் என்கிறார்.  பாலைவனம், பாறை,. ஆண்டவர் சொன்னால் கிடைக்க முடியாத இடத்தில் கூட தண்ணீர் கிடைக்கிறது. மக்களின் , விலங்குகளின் தாகம் தீர்க்கப்படுகிறது

இயேசு நிறமற்ற, சுவையற்ற தண்ணீரை திராட்சை இரசமாக்கி திருமண வீட்டின் தேவை நிறைவேற்று கிறார்.  மணவீட்டில் நடக்க இருந்த பிரச்சனை தேர்க்கப்படுகிறது. 

ஆண்டவர் முடியாது, நடக்காது, இயலாது என்ற காரியத்தை நடத்தி காட்டுபவர்.  நம் பிரச்சனை நம் கண்களுக்கு பெரியதாக இருக்கலாம். அவருக்கோ ஒரு  நோடிப்பொழுது போதும், ஒரே வார்த்தை போதும். 

அவரை இன்னும் ஆழமாக அன்பு செய்வோம்.  இறுக்கமாக பற்றிக் கொள்வோம். எல்லாம் அவர் பார்த்து கொள்வார். பயப்பட வேண்டாம். பொல்லாதவர்களாகிய நாமே நம் பிள்ளைகளுக்கு நல்லது செய்யும் போது, நம் தந்தை அவர் நம்மை மறப்பாரா?  

 

அன்பு ஆண்டவரே, உம்மை போற்றி புகழ்கிறேன். ஆண்டவரே இன்று எனக்கு என்ன தேவை என்பதை நீர் அறிவீர்.  என் தேவைகளை சந்தியும்.  நீர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பீர் என்று நம்புகிறேன்.  என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.  ஆமென்.