பல் சமய குழுவின் மிக முக்கிய உறுப்பினராக இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இயங்கும்.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (CBCI) மற்றும் சமூக சேவை அமைப்பான காரிட்டாஸ் இந்தியா மூலமாக, பல்வேறு மதங்களை சேர்ந்த தேசிய நடவடிக்கை ஒருங்கிணைப்பு குழு (MFACC) உருவாக்க விழாவில் முக்கிய உறுப்பினராக கலந்து கொண்டது.இந்த கூட்டம் மே 29, 2025 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள பர்மார்த் நிகேதன் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை உலக மதங்களுக்கிடையிலான WASH கூட்டணி (Global Interfaith WASH Alliance GIWA) மற்றும் யுனிசெஃப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த சந்திப்பில், சி.பி.சி.ஐ இனமற்ற மத உரையாடல் அலுவலகத்தின் தேசிய செயலாளர் அருட்பணி டாக்டர் ஆண்டோனிராஜ் தும்மா மற்றும் காரிட்டாஸ் இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் ஆபத்துகளை குறைக்கும் முயற்சிகளுக்கான தலைவர் நவ்நீத் யாதவ் ஆகியோர் சி.பி.சி.ஐ-யை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த முன்னோடியான முயற்சிக்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.இந்தக் கூட்டம் முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு ராம் நாத் கோவிந்த் அவர்களின் முன்னிலையில், ஏழு முக்கிய மதங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு மத அடிப்படையிலான அமைப்புகள் பங்கேற்கும்படி நடைபெற்றது.

புஜ்ய சுவாமி சிதானந்த் சரஸ்வதிஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த கூட்டம் பொது சேவைக்கான மத அடிப்படையிலான ஒத்துழைப்பில் ஒரு வரலாற்றுச் செய்தியை கொண்டுள்ளது.MFACC (பல்வேறு மதங்களை சார்ந்த நடவடிக்கை ஒருங்கிணைப்பு குழு), சுகாதாரம், ஊட்டச்சத்து, WASH (தண்ணீர், கழிவுநீர் மற்றும் தனிநபர் சுத்தம்), குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகிய முக்கியத் துறைகளில் ஒத்துழைந்த மதங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் குழு, வறுமையின் அழைப்புக்கும், பூமியின் அழைப்புக்கும் பதிலளிக்கும் வகையில், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கு பதிலளிக்க அறிவு பகிர்வு, நல்ல திட்டமிடல் மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான தேசிய மேடையாக செயல்படும்.

அடுத்த MFACC கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கூட்டங்கள் மூலம் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட உள்ளது.