மடமையின் மடியில் ஈருயிர்| Veritas Tamil

ஓடும் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர உதவி செய்து தாயையும் சேயையும் காப்பாற்றிய அருட்சகோதிரி வசந்தா
ஒடிசா 8 ஜூன் 2025 – மூத்த அருட்சகோதரி வசுந்தா(DSS) சமதா விரைவு வண்டியில் பயணம் செய்த ஒரு செவிலியர் ஆவார், மே 10, 2025 அன்று பிரசவ வலியில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார் - பின்னர் அமைதியாக தனது இருக்கைக்குத் திரும்பி அன்னை மரியாளின் பாடலைப் பாடினார்.
ஜூன் 1 ஆம் தேதி கோர்டா ரயில் நிலையத்தில் மதமாற்றக் குற்றச்சாட்டின் பேரில் இளம் அருட்சகோதரி மற்றும் அவரது தோழர்கள் கைது செய்யப்பட்டதாக நாடு முழுவதும் கவலையளிக்கும் செய்தி பரவிய நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு கன்னியாஸ்திரியின் அமைதியான இரக்கச் செயல் பெரும்பாலும் அறியப்படாமல் இருந்தது.
51 வருடங்களாக துறவற வாழ்விலே இணைந்து அருட்சகோதரியாக இறைபணியில் ஈடுபட்டு வரும் அருட்சகோதரி வசுந்தா, தொழில்முறையில் செவிலியராக உள்ளார். ஜான்சியில் நடந்த மாகாண அளவிலான கூட்டத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். மே 2 ஆம் தேதி ராயகடாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த அவரது ரயில் ரத்து செய்யப்பட்டது, மேலும் மே 9 ஆம் தேதி மறு அட்டவணைப்படுத்தப்பட்ட ரயிலில் ஏற முடிந்தது. ஒரு இளம் அருட்சகோதிரியுடன் வசுந்தா, ஒரு படுக்கை வசதிக்கொண்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மறுநாள் அதிகாலையில், தனக்கு அடுத்த பெட்டியில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதாகவும், மருத்துவ உதவியோ அல்லது மருத்துவ நிலையமோ எதுவும் தெரியவில்லை என்றும் கூறினாள். அந்தப் பெண்ணுடன் இருந்த ஒரே தோழர்கள் இரண்டு சிறுபிள்ளைகள் மட்டுமே. இந்த உதவியற்ற சூழ்நிலையில், அதில் உள்ள ஆபத்தை அறிந்து நான் அன்னை மரியாளின் பரிந்துரையை வேண்டி கர்ப்பிணி பெண்ணுக்கு உதவும் நடவடிக்கையில் இறங்கினேன்," என்று சீனியர் அருட்சகோதரி வசுந்தா கூறினார்.
சில நிமிடங்களில் சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்தது, ஆனால் நஞ்சுக்கொடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. "குழந்தையைப் பிடிக்கக்கூட எனக்கு உதவ யாரும் இல்லை. என் கைகள் பலவீனமாக இருந்தன, வெறுமையாக நேரத்தை கடத்த முடியாது என்பதை அறிந்து உதவினேன்.
கையில் எந்த கருவிகளும் இல்லாமல், செபம் மற்றும் தனது மநத்துவ அனுபவம் மட்டுமே அவரை வழிநடத்த, அவர் கவனமாக செயல்பட்டு இறுதியில் அந்த நஞ்சுக்கொடியை விடுவிக்க முடிந்தது. யாரோ ஒருவர் இறுதியில் தொப்புள் கொடியைக் கட்ட ஒரு சிறிய கத்தரிக்கோல் மற்றும் நூலைக் கண்டுபிடித்தார். இந்த அற்புதமான சுகபிரசவத்தை வெற்றிகரமாக முடிக்க ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆனது.
பிரசவ வேதனையில் துன்புறுவதை கேள்விபட்டு ஊடகங்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் காத்திருந்த நிலையில்இ ரயில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குள் நுழைந்த நேரத்தில் தாயும் கசேயும்யும் பாதுகாப்பாக நடைமேடையில் மகிழ்ச்சியுடன் நடந்தும் கொண்டிருந்தனர். மூத்த அருட்சகோதரி வசுந்தா தான் பயணம் செய்து கொண்டிருந்த பெட்டியில் இருந்தவாறு மண்டியிட்டு வசபம் செய்துகொண்டிருநதிருந்தார்.
கேரளா மாநிலம் சுங்கக்குன்னுவைச் சேர்ந்த அருட்சகோதரி வசுந்தா மஞ்சுபள்ளில், தீன சேவா சகோதரிகள் (DSS) சபையைச் சேர்ந்தவர். மேலும் ஐம்பது வருடங்களாக வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது ஒடிசாவின் ராயகடா மறைமாவட்டத்தின் லைகுடா ஆலயத்தில் பணியாற்றி வருகிறார்.
Daily Program
