நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
“இந்த உவமையின் பொருள் இதுவே; விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது."
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.