ஆண்டவரின் ஆவியாலே சாட்சிய வாழ்வு சாத்தியமாகும். | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 மே 2025                                                                                                                  
பாஸ்கா 6-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள்  16: 22-34
யோவான்  16: 5-11
 

ஆண்டவரின் ஆவியாலே சாட்சிய வாழ்வு சாத்தியமாகும்.


முதல் வாசகம்.

புனித பவுலும் அவரது உடன் பணியாளர்களும் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட பிறகு, பிலிப்பியில்  பலத்தப் பாதுகாவல் கொண்ட  சிறை  அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிறையில் இருந்தபோதும், அவர்கள் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது . பூகம்பம் சிறையை அசைக்க கடவுள் அனுமதிக்கிறார்.  சிறை வாயில்களைத் திறக்க,  சங்கிலிகள் உடைபடுகின்றன.  

சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, மேல் அதிகாரிகளுக்குப் பதுல் சொல்ல வேண்டுமே என்று எண்ணி காவலர்  வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். 

அப்போது பவுல் உரத்த குரல் எழுப்பி அவரைச் சாவிலிருந்து காப்பாடுகின்றார். அது மட்டுமல்லாமல் அவர் மீட்புப் பெறுவதற்கான வழியையும் சொல்கின்றார். அந்த சிறைக் காவலர் பவுலிடம், “நான் மீட்பு பெற என்ன செய்யவேண்டும் என்று கேட்கின்றபோது, பவுல் அவரிடம், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார் என்று லூக்கா விவரிக்கிறார்.


நற்செய்தி.

கடந்த சில நாள்களாக இயேசு  தூய ஆவியாரின் வருகையையொட்டி அறிவுறுத்தி வருகிறார்.  இன்றும்,  இயேசு தூய ஆவியாரின் வருகையைக்  குறித்து  எடுத்துச் சொன்னாலும், இங்கு மிகத் தெளிவாக, மிக வெளிப்படையாக, “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்” என்பதை வலியுறுத்துகிறார். 
அவர் சொன்னது போன்றே, இயேசு இவ்வுலகத்தை விட்டுச் சென்ற பிறகு தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வருகின்றார் என்று விவரிக்கறார்

சிநுதனைக்கு.

இயேசுவின் மரணத்திற்கு முன்பு, இயேசு தம்முடைய சீடர்களுக்கு, குறிப்பாக பன்னிரண்டு பேருக்கு, அவர் கண்டிப்பாகத் தந்தையிடம் செல்வார் என்றும்,   பன்னிரண்டு பேரும் அவருடனும், தந்தையுடனும் , தூய ஆவியாருடனும் கொண்டுள்ள உறவால்,  ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் அறிவுற்றுத்தியதை வாசித்றிந்தோம்  

இன்னும் சில நாட்களில், இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவைக் கொண்டாடவுள்ளோம்.  இன்றைய நற்செய்தியில், அவர்   “நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; நான் போனால், அவரை உங்களிடம் அனுப்புவேன்’ என்கிறார். இதுதான் கடவுளின திட்டம். இது நிறைவேற்ற இயேசு முழுமையாக தந்தைக்குக் கீ.ப்படித்து ஒத்துழைத்தார்.

முதல் வாகத்தில்,   முதலில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என நினைத்தவர், பின்னர், பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுந்து வணங்குகின்றார். 'பெரியோரே, மீட்படைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டு, அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவரும் அவரோடிருந்த அனைவரும் திருமுழுக்கு பெறுகிறார்கள் என்று லூக்கா குறிப்பிட்டுள்ளார்.  ஆம், சிறையையும் நற்செய்தி அறிவிப்புக் கூடமாக நம்மால் மாற்ற முடியும். குளிர்சாதன 5 நட்சத்திர வசதிகொண்ட மண்டபங்கள்தான் தேவை என்பதல்ல. 

இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்த  அதே வகையான துன்புறுத்தலை நாமும் அனுபவிக்கக்கூடும்.  இயேசுவை ஆண்டவராக ஏற்றதற்காக  பல கிறிஸ்தவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள் மற்றும் செய்து வருகிறார்கள்   என்பதை நாம் அறிவோம்.   நாம் நம்பிக்கையின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறோம். நாம் சாட்சி கொடுக்கும் விதம் பவுல் அல்லது பிற ஆரம்பகால சீடர்கள் செய்ததைப் போல இல்லாவிட்டாலும்  நமது துணிவை வெளிப்படுத்துவதன் மூலம் நாம்  கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழலாம்.  
நமது ஆற்றலாலும் அல்ல, சக்தியாலுமல்ல அல்ல
ஆண்டவரின் ஆவியாலே சாட்சிய வாழ்வு சாத்தியமாகும்.

 இறைவேண்டல்.


என் அன்பான இயேசுவே,  என் வாழ்க்கையில் நீர் விரும்பும் எந்த மாற்றங்களுக்கும் என் இதயத்தைத் திறக்க எனக்கு உதவியருளும். ஆமென். 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452