குணம் & மனம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.09.2024

உலகம் என்பது ஓடும் நீரோடை போலத் தான் எப்போதும் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நமக்காக அது காத்திருக்காது.

நாம் தான் நமக்கான வழியைக் கண்டறிந்து அதில் பயணம் செய்ய வேண்டும்.

நாம் வாழும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் காரணிகள்.

நேர்மையான குணம், தயாள மனம் எதையும் செய்யத் தயாராகும் மனோபலம்.

வாழ்க்கை நம்மிடம் தந்திருப்பது வெற்று காகிதங்கள் மட்டுமே.

அவற்றை வரைவதா எழுதுவதா கிறுக்குவதா கசக்குவதா கிழிப்பதா
முடிவு நம் கையில் தான் உள்ளது.

மேற்கூறிய காரணிகள் நல்ல படி இருந்தால்  வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் பொறுமையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி