மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024

மற்றவர்கள் உன்னை உதாசீனப் படுத்தும் போது உனக்கு மன உளைச்சலைத் தரும்.

உயிர் போகும் வலியை உண்டாக்கும் ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஓர் தெளிவைக் கொடுத்து உன்னை அமைதிப் படுத்தும்.

உன் ஆற்றல் வெளிப்படும்.

வலிகள் சில நேரம் புதிய வழிகளை ஏற்படுத்தும்.

அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே   மனிதர்களின் இயல்பு.

பிடித்திருந்தால் குறை குறைய தெரியும்
நிறை நிறைய தெரியும்.

பிடிக்கவில்லை என்றால் குறை நிறைய 
தெரியும் நிறை குறைய தெரியும்.
இதுவும் மனித இயல்புகளில் ஒன்று தான்.

எப்பொழுதும் உன்னை உன் 
கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்.

மற்றவர்கள் உன் எண்ணப்படி நடக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் திறமையும் நம்பிக்கையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க
                   

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி


 

Comments

ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 19 2024 - 8:21pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்....மனித இயல்பு பற்றிய எதார்த்தங்களை சிறப்பான சிந்தனைகள் மூலம் பகிர்ந்து கொண்ட அருள்தந்தை ஞா.சிங்கராயர் அவர்களுக்கு நேயர் இனிய இதயம் சார்பாக நன்றிகளும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்....உளவியல் ரீதியான சிந்தனைகள் ஒவ்வொரு தலைப்பிலும் நீங்கள் தருவது மனதுக்கு நல்ல பயிற்சியாகவும் ஆலோசனையாகவும். விழிப்புணர்வு தருவதாகவும் இருக்கிறது.....அதுபோல் யுடியூப் வழியாக அருள்சகோதரி திருமதி ஜெயதங்கம் வழங்கும் நிகழ்ச்சி மிக மிக அருமையாக இருக்கிறது...எனக்கு முந்திரி வேலை அதிகமாக இருப்பதால் நிறைய பதிவுகளுக்கு என்னால் கருத்துக்கள் பதிவிட இயலவில்லை....நன்றியுடன் இனிய இதயம் ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்