பொதுக்காலம் 14ம் ஞாயிறு | தினசரி மறைசாற்று | Veritas Tamil

பொதுக்காலம் 14ம் ஞாயிறு 

 

"நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள் - லூக்கா 10:1-12, 17-20.

 

மண்ணைத் தேடியும் பொன்னைத் தேடியும்

பெண்ணைத் தேடியும் பெருமைத் தேடியும்

விண்ணைக் குடைந்து வியப்பாய் தேடியும்

கண்டார் உண்டோ காலமும் அமைதி?

 

உலகம் தேடும் உயரிய அமைதி

தலைவன் இயேசுவில் தாராளமாய் உண்டு!

எங்கு சென்றினும் அங்கே அமைதியை - இயேசு

'தங்க செய்க' என்று வாழ்த்தினார்!

 

"இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக! - என

வந்த வீட்டில் சொல்க" என்றார்!

ஏற்றுக் கொண்டால் அமைதி விளங்கும்

மறுத்துக்கொண்டால் உடனே திரும்பும்!

 

இம்மையும் மறுமையும் உனையன்றி

எம்மிலே அமைதி ஏது இறைவா?

ஏங்கிடும் மனதின் துயரங்கள்

நீங்கவே அமைதியால் எனில் நிறைவாய்!

 

எழுத்து
அருட்பணி. மோசஸ் ராஜா MMI