பெண் - அதிசயம் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.062024

ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல பாதை வேண்டும் 

அந்த பாதையின் நடுவே நீரின் ஓடம் ஓடினால் அந்த மறு முனைக்கு செல்ல பாலம் வேண்டும் அல்லவா?

அதுபோல!

பெண் என்பவள் பிறந்த இடத்திலிருந்து புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க திருமணம் என்ற பாலம் வேண்டும் 

புகுந்த வீட்டு பாலத்தை கடந்து வந்து 

புதிய உறவுகளோடு பயணத்தை தொடர்ந்து 

அனைத்து சுற்றங்களோடும் அன்பு பாராட்டி 

உறவுகளை இணைக்கும் நூலிழையாக இயங்கும் அற்புத சக்தியே பெண் 

பெண்ணால் எதையும் துறக்கவும் முடியும் 
 
கடக்கவும் முடியும் 
 
இணைக்கவும் முடியும் 
 
ஈடுபடுத்தவும் முடியும் 

பெண்னாக பிறந்து விட்ட பிற்போக்கு சிந்தனை இல்லாமல் 

பெண் என்ற பெருமையை உணர்ந்து 

கடமையை செய்ய உருவெடுத்த உன்னத பிறப்பு என்ற 

முற்போக்கு சிந்தனையோடு தொடர்வோம் நம் பயணத்தை 

வாழ்க வளர்க 
சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி
 

Comments

ப.ஜோதிலெட்சுமி… (not verified), Jun 12 2024 - 4:15pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்...பெண் அதிசியம் என்ற தலைப்பில் அற்புதமான ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து சிதறல்களை சிந்தனை துளிகளாக பகிர்ந்து கொண்ட அருட்தந்தை திரு.ஞா.சிங்கராயர் அவர்களுக்கும்.வழங்கிய தமிழ்ப்பணிக்கும் நன்றிகளும் வாழ்த்துகள்..பெண் நாட்டின் கண் என்பதை நினைவில் கொண்டு பெண்மையை போற்றி பாதுகாப்போம்....ஆண்பெண் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பெண்சக்திக்கு முக்கியத்துவமும் உரிமைகளையும் கொடுத்து மரியாதை செய்வோம்...நன்றி. ப.ஜோதிலெட்சுமி தேவனூர் .மேலத்தெரு அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு
Tamil Survey Popup Image