பாதைகள் வேறு பயணங்கள் வேறு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.07.2024

பாதைகள் பலதும் நம்
பார்வையின் முன் நீள
பாவ வழி பலர் நாட
பாவியராய் சிலர் இங்கு.

போய்த்தொலையும் நாட்கள்
போகின்ற போக்கினிலே
போதையிலே பலர் வீழ
போதகராய் சிலர் இங்கு.

கலிகாலம் முற்றியதாய்
களவு, பொய், கற்பழிப்பென
கரியவழி பலர் நடக்க
கலைக்காலம் கனிந்ததென
கடமை, கண்ணியம், கட்டுப்பாடாய்
கனவுவழி சிலர் இங்கு.

எப்படியும் வாழ்வோமென
எட்டிப்பலர் நடக்க
இப்படித்தான் இருப்போமென
இயங்குகின்றார் சிலர் இங்கு.

நாம் எங்கே போகின்றோம்?
போவதற்கு முதலில்
நாம் இங்கு எங்கே??
நாற்றிசை தோறும்
நான்.. நான்.. நான் மட்டுமே.

நான் இறந்து
நாம் பிறப்பின்,
அல்லவை அகன்று
நல்லவை அவதரித்து
நம் பயணம் என்றும்
நற்பயணம் ஆகிடுமே.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளர்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி