தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

28 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 12 ஆம் வாரம் – சனி
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம்
எசாயா 61: 9-11
லூக்கா  2: 41-51

மாசற்ற வாழ்வுக்கு நம்மை அர்ப்பணிப்போம்!

முதல் வாசகம்.

எசாயா நூலில் இருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம் ஒரு முக்கிய இறைவாக்குப் பகுதியாகும்.  இது பாபிலோனில் அடிமை வாழ்விலிருந்து விடுவக்கப்படு  தாயகம் திரும்பிய யூதர்களக்குக் கடவுள் அளித்த  மறுசீரமைப்பு, ஆசீர்வாதம் மற்றும் நீதியின் வாக்குறுதிகளை வெளிப்படுத்துகிறது.  

கடவுளின் தாயன்ப எசாயா இறைவாக்கினர் விவரிக்கிறார். 

நற்செய்தி.

யூதரின் முக்கிய கொண்டாட்டமான பஸ்கா பெருவியவுக்காக மரியாவும் யோசேப்பும் ஒவ்வொரு வருடமும் எருசலேமுக்குச் செல்வது வழக்கம்.  இயேசுவுக்கு 12 வயதாக இருக்கும்போது, அவர்கள் அவரையும் அழைத்துச் செல்கிறார்கள் -  பெரவியாவுக்குப் பிறகு, மரியாவும் யோசேப்பும் தங்கள் வீடு திரும்பும் பயணத்தைத் தொடங்குகிறார்கள், இயேசு அந்தக் குழுவில் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஒரு நாள் பயணம் செய்த பிறகு, இயேசுவைக் காணவில்லை என்பதை உணர்ந்து, அவரைத் தேடி எருசலேமுக்குத் திரும்புகிறார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் இயேசுவை கோவிலில் காண்கிறார்கள், போதகர்கள் மத்தியில் அமர்ந்து, கேட்டுக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அவருடைய புரிதல் மற்றும் பதில்களால் அனைவரும் வியப்படைகிறார்கள், இது இளம் வயதிலேயே அவருடைய ஞானத்தைக் காட்டுகிறது.

மரியாவும் யோசேப்பும் அக்கறையுள்ளவர்களாகவும், இயேசுவின் பணியை முழுமையாகப் புரிந்துகொள்ள போராடுபவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.

சிந்தனைக்கு.

இன்று அன்னையாம் திருஅவை அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் இதயம் மாசற்றது, அது எப்போதும் அன்பினால் நிரம்பி இருந்தது. கானா ஊர் திருமண நிகழ்வில் நாம் அவரது இரக்கச் சிந்தையைப் பற்றி  அறிந்துள்ளோம்.   எனவே, இன்று இப்பெருவிழாவைக் கொண்டாடும் நாம்  அவரது பரிந்துரைகள் பற்றியும் மக்கள் அடைந்த நன்மைகள் பற்றியும் அறிவது சிறப்பு.

‘மாசற்ற இதயம்’ எனும்போது, அன்னை மரியாவின் இதயம் முற்றிலும் குற்றம் குறைகள் அற்ற இதயம் என்று பொருள்படுகிறது. ஆம், அவரது இதயத்தில் ஒரு துளி வஞ்சமும் இல்லை. அவரது இதயத்தில் வஞ்சம் இருந்திருந்தால் கடவுள் அவரை மீட்பரின் தாயாகத், தேர்வுச் செய்திருக்க மாட்டார். ஆகவேதான், அவரை ‘அருள் மிகப் பெற்றவர்’ என்று வாழ்த்துரைத்தார். அன்னை மரியாவின் இதயமானது, தமக்கு நிகழ்ந்ந்த எல்லாவற்றையும் அமைதியாகச் சிந்தித்து,  அமைதியாகத் துன்பங்களை ஏற்று  கடவுளை மகிழ்வித்த இதயம்.

உண்மையில், மரியாவும்  யோசேப்பும்  தொலைந்து போன மகனை ஆலயத்தில் காண்டதும், அவரை திட்டித் தீர்த்திருக்க வேண்டும். மாறாக, மரியா இவற்றையெல்லாம் தன் இதயத்தில் வைத்துக்கொண்டு அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தாள் என்று லூக்கா குறிப்பிடுகிறார். ஆம், பிரச்சனைகள் தலைத்தூக்கும் , எதிர் பாரா விபரீதங்கள் நிகழும்போது,  இறைவன்ன் துணைகொண்டு மௌனத்தில் சிந்தித்தலால் மட்டுமே அவற்றை புரிந்து  கொள்ள முடியும். இதற்கு அன்னை மரியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 


அன்னை மரியா  நமக்கெல்லாம் கடவுளிடம் பரிந்து பேசுகிறவராக மட்டுமல்ல, கடவுளின் இரக்கத்தை பெற்றுத் தருபவராகவும் இருக்கிறார். நம்மை  அவரது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, நாம் அனைவருமே தந்தையாகிய இறைவனின் அழைப்புக்கேற்ற பிள்ளைகளாக வாழ, நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.   
 

“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது” (லூக்கா 1:47) என்ற மரியாவின் வார்த்தைகள், அவரது உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துகின்றன. ஆனாலும் கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்ட ஒரு பகுதியினர் அன்னை மரியாவை எற்பதில்லை. அவருக்கு நாம் செலுத்தும் மேலான  வணக்கத்தைத் தவறாகச்  சித்தரிக்கிறார்கள். கடவுளோ அன்னைக்கு வேண்டிய  வெகுமதியை அளித்து, விண்ணகத்தின் அரசியாகக் கொண்டுள்ளார். எனவே, மரியாவுக்கான நமது வணக்கத்தை தொடர்ந்து செலுத்துவோம்.

அன்னை மரியாவின மாசற்ற இதயம் நம்மை மாசற்றவர்களாக உருமாற்றுகிறது.  

இறைவேண்டல்.


அன்பின் இதய ஆண்டவரே! அன்னை மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில்,  அன்னை மரியாவைப் போல நானும் என்னில் மாசற்ற இதயம் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)