கடவுள் குயவன் என்றும், நாம் களிமண் என்றும், நாம் கடவுளின் கைவேலை என்றும் சிந்திக்கையில் பெருமைபட வேண்டும். ஆகவே, குயவனாக தம்மை வெளிப்படுத்தும் கடவுள் நம்மை அவரது விருப்பப்படி வடிவமைக்கவும் உருவாக்கவும் அனுமதிக்க வேண்டும்.
நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்ட ஒருவரிடம். (மத் 19:21) “உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்று இயேசு கூறியதில், அவன் உடைமைகளை விற்று விண்ணரசு எனும் புதையலையோ முத்தையோ வாங்க விரும்பவில்லை. அவன் உலகைப் பற்றிக்கொண்டு வாழ்வதே பெரிதென கொண்டான்.
‘இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.’ (1 யோவான் 5:1) என்று யோவான் கூறியதை மனதில் கொள்வோம், நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். ஆகவே, இயேசுவே மெசியா என்று உலகெங்கும் அறிக்கையிட கடமைப்பட்டவர்கள்.
அறுவடை என்பது உலக முடிவைக் குறிக்கிறதாக பொருள் கொள்ளலாம்.
அறுவடையின் இறுதியில் நல்லவை களஞ்சியத்திலும், களைகள் தீயிலிட்டு சுட்டெரிக்கப்படுவதும் நல்லவர் விண்ணகம் செல்வதையும், தீயவர்கள் நரகம் செல்வதையும் குறித்துக்காட்டுகிறார் ஆண்டவர்.