கேட்கப் பழகுவோமா?

ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் “எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.

தொடக்க நூல் 25-22.

 

ஆண்டவரே, இந்த துன்ப நேரத்தில் எங்களோடு இரும் . தொற்று நோய்க்காக பயந்து வாழும் இந்த நிலையை மாற்றும். ஆண்டவரே உமது ஆலய வழிபாடுகளில் கூட முழு  சுதந்திரமாக ஈடு பட முடியாத நிலைமையை மாற்றும்.  ஆண்டவரே உரிமைக்காக , சமுதாய நலனுக்காக ஏழைகளின் மறுவழ்வுக்காக பணி செய்யும் துறவிகள், குருக்கள் போது நிலையினர்,  நலமுடனும், நெருக்கடி இன்றியும் பணி ஆற்ற  அருள் புரியும் ஆமென்.