மதங்களுக்கு இடையே நடைபெற்ற இஃப்தார் சந்திப்பு ! | Veritas tamil

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மறைமாவட்டம், Human Friends Organization அமைப்புடன் இணைந்து, மார்ச் 6 அன்று லாகூரில் உள்ள செயிண்ட் அந்தோணி உயர்நிலைப் பள்ளியில் மதங்களுக்கு இடையேயான சமாதான ஜெபமும் இஃப்தார் விருந்தும் ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பல்வேறு மத சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, உரையாடல் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்த்தெடுக்க நோக்கமாக கொண்டது.

இந்தச் சந்திப்பில் மதத் தலைவர்களும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அமைதியான இணை வாழ்வை ஊக்குவிக்கவும் முயன்றனர்.

இந்த நிகழ்வை லாகூர் மறைமாவட்டத்தின் விக்கார் ஜெனரல் அருட்தந்தை அசிப் சர்தார் தலைமையேற்றார். நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பாராளுமன்ற செயலாளர் சோனியா அஷர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை சாஜித் கிறிஸ்டோபர் வரவேற்று, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சகோதரி ஜெனிவீவ், அசிம் மக்தூம், அருட்தந்தை பஷாரத், சாம்சன் சலாமத், அருட்தந்தை ஜேம்ஸ் சானன், டாக்டர் பதர் முனீர் மற்றும் ஆஷிக் ஹுசைன் உள்ளிட்ட பல மதத் தலைவர்களும் பேச்சாளர்களும் கலந்து கொண்டு சமாதானம் மற்றும் மதஒற்றுமை குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

பேச்சாளர்கள் அனைவரும், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை அமைதியும் பரஸ்பர மரியாதையும் நிலைநிறுத்தப்படும் சமூகத்தை உருவாக்க மிக முக்கியமானவை என்று வலியுறுத்தினர்.

நிகழ்ச்சி இறுதியில், பல்வேறு மத மரபுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே ஒற்றுமையும் நட்பும் வெளிப்படுத்தும் வகையில் அனைவரும் இணைந்து இஃப்தார் விருந்தில் பங்கேற்றனர்.