இந்திய துறவற சபைகள் இணைந்து "ஜனநாயக மதிப்பீடுகளை காத்திட மதச்சார்பற்ற அணிகளுடன் கரம் சேர்க்கிறது || வேரித்தாஸ் செய்திகள்

"நாட்டை காப்போம்" என்ற முழக்கத்துடன் மதச்சார்பற்ற அணிகளுடன் இணைந்து, நாட்டின் பாதுகாப்பின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலாச்சாரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு,நாட்டின் அரசியலமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி இந்திய துறவற சபைகளை தமிழ்நாடு துறவற சபைகள் இந்திய மாநாட்டின் (TNCRI) தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பான் செகோர்ஸ் அருள்சகோதரிகளின் சபை தலைவி மற்றும் தமிழக துறவற சபைகளின் ஒருங்கிணைப்பின் தலைவராக செயலாற்றி வரும் அருள்சகோதரி மரியா பிலோமி, நம் நாட்டில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை மற்றும் இந்தியாவில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து துறவற சபைகளையும் கேட்டுக் கொண்டார்.
ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் மதச்சார்பற்ற அமைப்புகளை ஆதரிப்பது தேசத்தின் கடமை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அருள்தந்தையர்கள் , அருள்சகோதரிகள் மற்றும் அருள்சகோதரர்கள், என அனைவரும் நமது ஒற்றுமையைக் காட்ட அதிக எண்ணிக்கையில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன், என்று அருள்சகோதரி பிலோமி துறவற சபைகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
"நாட்டை காப்போம் " என்ற கருப்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பு என்பது பல தளங்களில் மக்களைப் பாதுகாக்கும் சிவில் சமூக அமைப்புகளின் தொகுப்பாகும். இது இந்தியக் குடியரசின் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்காக 2020 இல் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, மதுரையில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய அரசியலமைப்பு, அதன் மதிப்பீடுகள் மற்றும் அதன் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் முதன்மையான நோக்கத்தை அடைவதற்கும் தேசத்தைக் காப்பதும் அதற்க்கு தேவையான நடவடிக்கைகளை இந்த கூட்டமைப்பு எடுத்து வருகிறது.
இந்த கூட்டமைப்பு கருத்தரங்குகள், எதிர்ப்புக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிகை வெளியீடுகள் மூலம், நாட்டின் பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க குடிமக்களை ஊக்குவிக்கிறது.
அனைத்து முரண்பாடுகளையும் தாண்டிய கூட்டமைப்பு, பல்வேறு சிவில் மற்றும் சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் மற்றும் அரசியல் மற்றும் மதச்சார்பின்மை அணிகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேசத்தின் உண்மையான மற்றும் உறுதியான அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்பு போன்றவைகளை இந்த அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.
கலாச்சார நடைபயணம்
இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகள், 12 அட்டவணைகள் மற்றும் கிட்டத்தட்ட 500 கட்டுரைகளைக் கொண்டுள்ளது, இது உலகின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய அரசியலமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையே.
முன்னுரையில் கூறப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பு சமத்துவம், சகோதரத்துவம் ,பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், தனி மனித சுதந்திரம் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதி செய்யும் மிக உயர்ந்த ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளை நிலைநிறுத்துகிறது.
டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு, ஒரு சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் இறையாண்மை கொண்ட குடியரசாக அதன் தொடக்கத்தில் இருந்து மாநிலங்களின் ஒன்றியம், தற்போது பிராமண பாசிஸ்டுகளால் மிக பெரிய ஆபத்து மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவின் விளிம்புநிலை மக்கள் - தலித்துகள், பெண்கள், குழந்தைகள், ஆதிவாசிகள் மற்றும் சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர் - அவர்களின் அடிப்படை உரிமைகளை அணுகுவதற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
கலாச்சார நடைப்பயணமானது நமது வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் சமத்துவத்திற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு மதிப்பீடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அளவிலான அரசியல் மாநாடு
நாட்டை காப்போம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அக்டோபர் 17, 2023 அன்று மாநில அளவிலான அரசியல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த மாநாட்டில், தேசிய மற்றும் மாநில அளவிலான சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்கள், மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் கண்ணியம் மற்றும் குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதன் மூலம் காலத்தின் அவசரத் தேவைக்காக குரல் கொடுப்பார்கள். சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாத்தல், பொறுப்புடன் கூடிய செயல்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்துதல், அரசாங்கத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்பதை செயல் வடிவில் உறுதி செய்தல் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
ஜாதி, மதம், சார்ந்த கருத்துகள் தொடர்பான அனைத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டிய தருணம் இது . இதுவே ஒரு சரியான தருணம் மற்றும் மிக அவசரத் தேவை என்று நாட்டை காப்போம் கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயகம், பன்முகத்தன்மை மதச்சார்பற்ற இந்தியா என்ற ஒற்றை உன்னதப் பார்வையைப் பாதுகாக்கவும் அனைத்து மக்களையும் ஒன்றாக கைகோர்க்க இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
முற்போக்கு சிந்தனை, நீதி மற்றும் சமத்துவம் , அமைதியான மற்றும் இணக்கமான இந்தியாவின் பாரம்பரியத்தை நமது வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பதற்கு, விழித்தெழுந்து, எழுச்சி பெற மற்றும் செயல்பட கைகோர்ப்போம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-அருள்பணி வி.ஜான்சன் SdC
https://www.rvasia.org/asian-news/indian-religious-congregations-collaborate-secular-forums-promote-democratic-values
Daily Program
