நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.