மனநலம் காக்க உளவியல் சமூக ஆலோசனை மையம் - காரித்தாஸ் பங்களாதேஷ் | Veritas Tamil

ஜூன் 24, 2025 அன்று, குல்னா பகுதியில் கரித்தாஸ் பங்களாதேஷ், குல்னா நகரக் கழகத்தின் கீழ் இயங்கும் சுகாதாரக் கட்டிடத்தில் உளவியல் சமூக ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.
குல்னா நகரக் கழகத்தின் (KCC) தலைமை நிர்வாக அதிகாரி (இணைச் செயலாளர்) லஸ்கர் தாஜுல் இஸ்லாம் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
குல்னாவின் பிரதேச ஆணையர் (கூடுதல் செயலாளர்) மற்றும் KCC இன் நிர்வாகி திரு. ஃபிரோஸ் சர்க்கார், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து உளவியல் சமூக ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக KCC இன் செயலாளர் ஷெரீப் ஆசிப் ரஹ்மான்; சிவில் சர்ஜன் டாக்டர். மொசம்மத் மஹ்ஃபுசா காதுன்; மற்றும் டாக்டர் ஷரீப் ஷமுவேல் இஸ்லாம் KCC இன் தலைமை சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.
வின்ராக் சர்வதேச நாட்டுப் பிரதிநிதியும் திட்ட இயக்குநருமான தீப்தா ரக்ஷித் வரவேற்புரையாற்றினார். அஷ்ஷாஷ் திட்டத்தின் மூத்த மேலாளர் ஷேக் நஸ்முல் இஸ்லாம் திட்டத்தின் கண்ணோட்டத்தை வழங்கினார்.
திட்ட மேலாளர் ப்ரோவாஷ் சந்திர பிஸ்வாஸும் கருத்துரைகளை வழங்கினார். மேலும் கரித்தாஸ் பங்களாதேஷ் திட்டப்பணி இயக்குநர் அல்பினோ நாத் நன்றியுரை வழங்கினார்.
விழாவில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், பங்குதாரர்கள் மற்றும் திட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மனித கடத்தலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு அதிர்ச்சி தொடர்பான ஆலோசனை மற்றும் மறுவாழ்வு சேவைகள் மூலம் ஆதரவளிப்பதே ஆலோசனை மையத்தின் நோக்கமாகும். மேலும் நீண்ட காலத்திற்கு, இது அனைவருக்கும் நிலையான மன ஆரோக்கியத்தை உருவாக்க உதவும்.
மோசமான உள்கட்டமைப்பு, சமூக களங்கம் மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக வங்கதேசத்தில் மனநல சிகிச்சை சவாலானது. அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபட்டாலும், இன்னும் பெரிய சிகிச்சை இடைவெளி உள்ளது. மேலும் தகுதிவாய்ந்த நிபுணர்கள் மற்றும் எளிதில் பெறக்கூடிய சேவைகளுக்கான தேவை உள்ளது. தேவைப்படும் அனைவருக்கும் உதவ, மருத்துவ உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் போன்ற போதுமான மனநல நிபுணர்கள் பங்களாதேஷில் இல்லை.
மக்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை உதவியைப் பெற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.
கிராமப்புறங்களில் உள்ள பலருக்குத் தேவையான மனநலப் பராமரிப்பு கிடைப்பதில்லை, ஏனெனில் பெரும்பாலான சிறப்பு வசதிகள் மற்றும் சேவைகள் நகரங்களில், குறிப்பாக நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ளன. மனநலப் பிரச்சினைகள் உள்ள ஏராளமான மக்களுக்குத் தேவையான பராமரிப்பு கிடைப்பதில்லை, இது சேவைகளின் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது.
மனநலப் பிரச்சினைகள் அல்லது உதவியை எங்கு பெறுவது என்பது பற்றி பலருக்குத் தெரியாததால், தாமதமாக சிகிச்சை பெறுவதோ அல்லது சிகிச்சை பெறாமலோ இருப்பது பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது.
2018 மனநலச் சட்டம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கரித்தாஸ் பங்களாதேஷ் உட்பட பல அரசு சாரா நிறுவனங்கள், சமூகங்களில் உளவியல் ரீதியான ஆதரவை மேம்படுத்தவும், களங்கத்தைக் குறைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயல்பட்டு வருகின்றன.
பல திட்டங்கள் மனநலப் பராமரிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக சமூகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு. சில நிறுவனங்கள் பல்வேறு மனநலப் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க இணையவழி தளங்களைப் பயன்படுத்துகின்றன.
மனநலத்தில் தொழில்முறை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. திட்டங்கள் மற்றும் கொள்கைகள் நடைமுறையில் இருந்தாலும், மனநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் போதுமான பணத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து மக்கள் இன்னும் கவலைப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள் மனநலம் பற்றி சிந்திக்கும் விதம், கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் சேவைகளைப் பெறுவதற்கும் இன்னும் ஒரு தடையாக உள்ளது. உதவி தேவைப்படும் அனைவருக்கும் அது கிடைப்பதை உறுதி செய்வதும்இ மனநலச் சட்டத்தை அமல்படுத்துவதும் சவாலானது.
சுருக்கமாகச் சொன்னால், பங்களாதேஷ்சில் மனநல நெருக்கடியைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மனநல நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, களங்கத்தை நீக்குவது மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது முக்கியம். இதனால் மனநலக் கோளாறுகள் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவையான பராமரிப்பு மற்றும் ஆதரவைப் பெற முடியும்.
Daily Program
