வெற்றியின் உச்சியில் தனிமையின் வலி | Veritas Tamil

சிங்கவேல் இவர் அரசவையின்  முதன்மை வீரர். எதிரிகளை எளிதில் வீழ்த்தும் திறமை, ஆயுதக் கலையில் தலைசிறந்தவன். பல போர்களில் வெற்றி பெற்றவனாக அரசனின் பாராட்டும் பெருமையும் பெற்றிருந்தான்.

ஆனால் அவனிடம் ஒரு குறை இருந்தது  யாருடனும் உறவோ, நாட்போ கொள்வதில்லை. குடும்பம், உறவுகள், நண்பர்கள் என்று யாரையும் நம்பாதவன். "வெற்றிக்கு உறவுகள் தேவை இல்லை" என்பதே அவன் நம்பிக்கை.

ஒரு நாள் கடுமையான போர். எதிரியின் தாக்குதலில் சிங்கவேல் படுகாயம் அடைகிறான். அவன் வீழ்ந்த இடம் வெறுமையாகிவிட்டது. நாள்கள் சென்றன. எவரும் வரவில்லை. ஏனெனில், அவனுக்கு நெருக்கமான யாரும் இல்லை.

அவன் வாழ்க்கையின் கடைசி நாளில் தான் உணர்கிறான் தனக்காக அழ ஒருவரும் இல்லாத நிலையே உண்மையான தோல்வி என்பதை புரிந்துகொண்டான்

வாழ்க்கை பயணம்பாடமாக...

இந்தச் சம்பவம், வெற்றி, வீரியம், புகழ் ஆகியவை மட்டும் மனிதனை முழுமையாக்காது என்பதையும், நம்மை நேசிக்கும் உறவுகள், நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையாகிவிடும் என்பதையும் உணர்த்துகிறது.

நம்மும் சிந்திக்க வேண்டியது:

  • உங்கள் வெற்றிக்குப் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்?
  • அவர்கள் காயப்படும்போது நீங்கள் இருப்பீர்களா?
  • உங்களை நினைத்துப் பயணிக்க வைக்கும் உறவுகள் இருக்கிறதா?

"வெற்றியை நிர்ணயிப்பது அன்பும் உறவுகளுமே. போரில் வெற்றி பெற்ற வீரனும், உறவுகளில் தோல்வியுற்றால், அந்த வெற்றிக்கு எந்த அர்த்தமும் இல்லை."