எல்லாம் நன்மைக்கே...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.07.2024

எல்லா வலிகளும்
நன்மைக்கே...

யாரையும் நம்பி நானில்லை என்பதை அறிய ஒருவரை முழுவதும் நம்ப வேண்டி இருந்தது.

யாருக்கும் யாரும் ஆதரவில்லை என்பதை அறிய ஒருவரின் ஆதரவை கெஞ்ச வேண்டி இருந்தது.

இறுதி வரை யாரும் கூட வருவதில்லை
என்பதை அறிய ஒருவரின் விலகல் தேவைப்படுகின்றது.

துரோகம் பழகு என்ற அரிய தத்துவத்தை அறிய ஒருவரின் துரோகம் தேவைப்படுகிறது.

உனக்கான ஆறுதல் உன்னிடமே உள்ளது என்று அடுத்தவர்களிடம் நான் அறிவுரை கூற எனக்கு ஒரு மடி பறிக்கப்படுகிறது.

உன் கண்ணீர் துளிகளை துடைக்க உன் கரங்களே உள்ளது. என்று நான் நீட்டி முழக்க துடைக்காமல் விட்ட என் கண்ணீர் துளிகள் தேவைப்படுகிறது.

யாரும் நிரந்தரமில்லை என்ற ஒன்றை அறிய நிரந்தமானவர்கள் என்று நினைத்த மாயை மறையும் போது புலப்படுகிறது.

எல்லாமே எல்லோருக்கும் தெரியாது. என்பதற்காக எல்லாமே வாழ்வில் 
ஒரு முறை புகுத்தப்படுகிறது.

நீங்கள் விலகியே இருந்தாலும் 
உங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அதில் 'பாடம்' கற்றுக் கொடுத்து பிரிவு என்ற அனுபவம் திணிக்கப்படுகிறது.

அந்த அனுபவம் உங்கள் வாழ்வினை 
சீராக்குகிறது மேம்படுத்துகிறது.

ஆக 'எல்லா வலிகளும் நன்மைக்கே".

கடவுளைத் தவிர உனக்கு யாரும் நல்லது செய்ய முடியாது, என்பதை அறிய உன் வாழ்க்கை முழுவதும் தேவைப்படுகிறது.

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி