நாமும் பல சமயங்களில் மற்றவர்கள் நம்மைக் கண்டித்துத் திருத்த முற்படும் போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்,அவர்களுடைய பிண்ணணி என்னவென்பதை ஆராயத் தொடங்குகிறோம். இப்படிப்பட்ட மனநிலையை அகற்ற இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மத் 16:26) எனும் இயேசுவின் கேள்வியை மனதில் நிறுத்தி, நற்கருணையின் மக்களாக வாழ்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமையையும் அதற்கான மிகத் தெளிவான விளக்த்தையும் நமக்குக் கூறுவதை நாம் வாசிக்கிறோம். விதை கடவுளின் வார்த்தை என்பதும், அவ்வார்த்தைகளைக் கேட்கின்றவர்களின் வேறுபட்ட மனநிலைகளும் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நாம் இறை திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது தூய ஆவியார் நம்மிடம் குடி கொள்வார். அப்பொழுது அவர் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் ஆற்றலும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அத்தகு ஆற்றலை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள இறை திருவுளத்தை அறிந்து செயல்படும் ஞானத்தையும் அருளையும் வேண்டுவோம்.
கடவுளின் ஆசீரையும் அருளையும் பெறுவதற்கு பொறாமை என்ற நச்சுக்கிருமித் தடையாக இருக்கிறது. அவற்றைக் களைந்து மனிதநேயத்திலும் மனித மாண்பிலும் சிறந்து விளங்குவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.
சமத்துவமும் சமூக நீதியும் வெளிப்பட நாம் போராட வேண்டும். இதைச் செய்திடவே நம் ஆண்டவர் இயேசு நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். சட்டத்தை வைத்து பிறர் நல வாழ்வு பெற நாம் உழைக்கத் தயாரா?
நாம் அடிக்கடி ஆலயம் செல்கிறோம். செபிக்கிறோம். ஆனால் "வந்து பாருங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளை உணர்ந்து அவரைச் சென்று பார்த்திருக்கிறோமா? இனிவரும் காலங்க கில் இயேசுவின் அழைப்பை ஏற்போம். கடவுளைச் சார்ந்தவர்களாக மாறி நம் வாழ்வால் அதை எண்பிக்க தொடர்ந்து முயல்வோம்.
கடவுளுடைய திட்டத்தை கபிரியேலின் வார்த்தைகள் வழியாகக் கேட்டவுடன் மரியா கலங்கினார் என நாம் வாசிக்கிறோம். கடவுளின் விருப்பம் நம்மைக் கலங்கடிக்கக்கூடியதா? பயமுறுத்தக் கூடியதா?
நாம் தடுமாறும் வேளையில் கடவுள் அவருடைய வார்த்தைகளாலோ அல்லது மனிதர்கள் மூலமோ நிகழ்வுகள் மூலமோ நாம் என்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறையை நமக்கு நிச்சயம் தருவார். இறைதிட்டம் நம்மிலே நிறைவேற அனுமதிக்கத் தயாரா?
இறைவேண்டலாலும், இறை திருஉளத்திற்குப் பணிந்து நற்காரியங்களில் ஈடுபடுவதாலும், உலக நாட்டங்களைத் தவிர்ப்பதாலும் நம் தூய்மையைக் காத்துக்கொள்ள முயல்வோம்.தவறி வீழ்ந்தாலும் மனம்மாறி அருட்சாதனங்களின் உதவியோடு மீண்டும் எழுவோம். அதற்காக இறைவேண்டல் செய்வோம்.
நமது உள்ளத்தின் ஆழத்தை அச்செபங்கள் தொடுவதில்லை. இதன் விளைவாக நாம் வாழ்வில் தளர்ந்து விடும் அபாயம் உள்ளது. எனவே திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் இந்நாட்களைப் பயன்படுத்தி நம்முடைய இறை உறவை ஆழப்படுத்த முயலுவோம்.அவ்வுறவை நம் வாழ்நாளெல்லாம் தொடர முயற்சிப்போம்.