குருதியொடு கண்ணீர் கொட்டியது மண்ணில் வெறிகொண்ட வெள்ளை ஆடியது வேட்டை !

குருதியொடு கண்ணீர் 

கொட்டியது மண்ணில்

வெறிகொண்ட வெள்ளை

ஆடியது வேட்டை  !

 

பறிகொடுத்தார் உயிரை

பாரதத்தை மீட்க

நெறிநின்றார் மக்கள்

நெடுவெளிச்சம் கண்டார் !

 

தாய்மண்ணை மீட்க

தாம்கண்ட கஷ்டம்

வாழ்வெல்லாம் மக்கள்

மனவுறுதி ஆச்சு !

 

யாரெதிர்த்து வரினும்

போரெழுந்து வரினும் 

வீரமுடன் எதிர்த்து

விரட்டிடுவார் மக்கள் !

 

சுதந்திரத்தின் விடியல்

குடியரசாய் விரிந்து

மக்களது ஆட்சி

மலர்ந்ததுவே சிறப்பாய்  !

 

பாரதத்தாய் உலகில்

வீரியத்தின் வடிவம்

பண்பாடி நாங்கள்

கொண்டாடி மகிழ்வோம்  !

 

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா