கிடைக்கப் போகும் கைம்மாறு என்ன?

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.

சீராக் 2.9

ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்வோம் அவர் நமக்கு துணை செய்வார். நம்  வழிகளைச் சீர்படுத்தி அவரிடம் நம்பிக்கை கொள்வோம்.

ஆண்டவருக்கு அஞ்சி அவருடைய இரக்கத்துக்காகக் காத்திருப்போம். நெறி பிறழாது இருப்போம்.

நமக்கு கைம்மாறு கிடைக்காமற் போகாது.

முந்திய தலைமுறைகளை எண்ணிப்பார்த்தால் . ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?

அவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.

ஆபிரகாம் முதல் திருத்தூதர்கள் வரை ஆண்டவரை நம்பியவர்கள் அவரால் நிறைவை கண்டனர்.

நாம் ஆண்டவருடைய  விருப்பத்தையே தேடி அதில்  நிறைவு காண்போம்.

அவர் திருமுன் நம்மை தாழ்த்திக் ஆண்டவருடைய அன்பை நிறைவாக பெறுவோம் . 

 

ஆண்டவரே உம் முன் எங்களை தாழ்த்துகிறோம்..  உம் நெறிகளில் எங்களை நடத்தும். உமக்கு வேதனை தரும் பாவத்தை எங்களை விட்டு அகற்றும். உம் திருமுன் எப்பொழுதும் மகிழ்ந்து களிகூரப்பண்ணும். ஆசீர்வதியும்.  ஆமென்.