உறவின் இறைவன்

 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

தொடக்க நூல் 1-27

ஆண்டவர் உறவுகளை உருவாக்குபவர்.  மனிதன் தனியாக இருந்தால் அவன் கூட பேச, விளையாட , அவனை மகிழ்விக்க ,  ஒரு உறவு வேண்டும் என நினைத்த. கடவுள் மனைவி என்ற உறவை உண்டாக்கினார்.  உறவுகளோடு வாழ்வதை விரும்புகிற இறைவன் அவர். குடும்பமாக வாழ்வதை ஆசீவதிக்கும் தந்தை .

உறவினர்கள் மாறலாம், ஆனால், உறவுகள் தொடரும்.  அன்பு, இரக்கம், உண்மை, உற்சாகம், தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றை கைக்கொள்வது உறவுகளை தங்க வைத்து கொள்ள உதவும்.  பிறரை பாராட்டுவோம். அவர்களின் பிரச்சனைகளை அறிவோம். நம்மால் முடிந்த உதவி செய்வோம். 

சாதி, மதம், இனம், மொழி இவற்றை கடந்து உறவை வளர்ப்போம். இறக்கத்தான் பிறந்தோம். இறுதி வரை இரக்கம் காட்டுவோம். அன்பு சொற்களில் அல்ல வாழ்க்கையில் நிறைவு பெறுகிறது. 

நற்செய்தியை வார்த்தைகளால் அல்ல .. வாழ்க்கையால் அறிவிப்போம். 

 

 ஆண்டவரே நீர்  எனக்கு தந்த அம்மா, அப்பா, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் , வாழ்க்கை துணை  அனைவருக்காகவும் நன்றி.  இயேசுவே என்னையும் என் உறவுகளையும் நிறைவாக ஆசீர்வதித்து வழி நடத்தும். உம் சிறகுகள் நிழலில் மூடி  பாதுகாத்து கொள்ளும். ஆமென்