சில நேரங்களில் கடின பாடங்கள் அவசியம்... | பாரதி மேரி | VeritasTamil

சில நேரங்களில் கடின பாடங்கள் .அவசியம்... 

ஒரு நகரத்தில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் வசித்து வந்தார். அவரது ஒரே மகன் இன்னும் சிறுவனாக இருந்தான், அவன் சோம்பேறியாகவும், வேடிக்கையாகவும் வாழ்கையில் ஒரு பொறுப்புணர்வு இல்லாமல்  இருந்தான். அவன் மகன் பணத்தை வீணாக செலவழிப்பான், வீட்டில் எந்த வேலையிலும் உதவி செய்யவில்லை.

தொழிலதிபர் தனது மகனுக்கு உழைப்பின் மதிப்பைப் பற்றிக் கற்றுக்கொடுக்க விரும்பினார். எனவே ஒரு நாள் அவர் தனது மகனை அழைத்து, "இன்று முதல் நீங்கள் அந்த நாளுக்கு ஏதாவது வருமானம் கொண்டு வந்தால் மட்டுமே  இரவில் உணவு வழங்கப்படும்" என்றார்

முதலில் பையன் குழம்பிப் போனான், ஆனால் அவன் அப்பாவின் கடினமான முகத்தைப் பார்த்தபோது அவன் சொன்னதில் அவர் எவ்வளவு சீரியஸாக இருக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. மகன் பயந்து போய் தன் அம்மாவிடம் சென்றான்.  இதைப் பற்றி எல்லாம் தன் அம்மாவிடம் சொன்னான். அம்மா தன் பையன் தொந்தரவு செய்வதையோ அல்லது இரவு உணவைத் தவிர்ப்பதையோ விரும்பவில்லை. அதனால் அன்று அவள் அவனுக்கு ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்தாள்.

இரவு உணவு மேஜையில் தந்தை மகனிடம் அன்றைய சம்பளம் பற்றி கேட்டபோது, சிறுவன் உடனடியாக அந்த தங்க நாணயத்தை அவரிடம் கொடுத்தான். அந்த தங்க நாணயத்தைப் பார்த்த தந்தை, தான் அந்த பணத்தை சம்பாதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.
அவன் சிறுவனிடம் அந்த நாணயத்தை முற்றத்தில் உள்ள கிணற்றில் போடச் சொன்னார். எந்த தயக்கமும் இல்லாமல் சிறுவன் வெளியே சென்று அந்த நாணயத்தை கிணற்றில் எறிந்துவிட்டு வந்து உணவை சாப்பிட்டான்.

மறுநாள் அதிகாலையில் தந்தை தனது மனைவியை ஊரிலிருந்து வெளியே அவளுடைய பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பினார். சிறுவன் எழுந்ததும் தந்தை சிறுவனுக்கு இரவு உணவின் நிலைமையை நினைவூட்டினார், மேலும் அம்மா தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றதைப் பற்றியும் கூறினார்.

அம்மா பணம் கொடுக்க இல்லைன்னு தெரிஞ்சு, அவன் தாத்தாவிடம் போனான். தாத்தா சில காசுகளைக் கொடுத்தார் இரவு அப்பா பணம் பற்றி கேட்டதும் , மகன் காசுகளைக் கொடுத்தான். மறுபடியும் அந்தக் காசுகளைக் கிணற்றுல போடச் சொன்னார். மறுபடியும் தயங்காமல் பையன் அந்தக் காசுகளைக் கிணற்றுல போட்டுட்டு சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.

அப்பாவுக்குத் புரிந்தது அவனுக்குப் பணம் கொடுத்தது அவன் தாத்தா என்று. அதனால் படுக்கைக்குப் போறதுக்கு முன், அவரிடமும் போய் நிலைமையைப் பற்றி சொன்னார். தாத்தாவுக்குப் புரிஞ்சுது, மறுநாள் பணம் கேட்டு வரகூடாது என்று அவரும் வெளியே போனார். 

காலையில் அப்பா மறுபடியும் சாப்பாட்டு நிலைமையைப் பற்றி அவனுக்கு நினைவூட்டினார். பையன் தன் தாத்தாவைத் தேடிச் சென்றான், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த முறை அவனுக்கு உதவ யாரும் இல்லாததால், வேலை தேடிச் சந்தைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்து ஒரு கடைக்காரர் அவனுக்கு வேலை கொடுக்க ஒப்புக்கொண்டார்.

கடைக்காரர் அவனிடம் தன் பெட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் பத்து ரூபாய் தருவதாகச் சொன்னார். பையனால் மறுக்க முடியவில்லை, வேலை முடிவதற்குள் வியர்வையில் நனைந்திருந்தான். அவன் கால்கள் நடுங்கின, கழுத்தும் முதுகும் வலித்தன.

மாலையில் அவன் வீடு திரும்பியதும் அவன் அப்பாவிடம் சென்று அந்த பத்து ரூபாய்களைக் கொடுத்தான். இந்த முறையும் அப்பா அதை கிணற்றில் எறிந்துவிடச் சொன்னார். பையன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி எறிவதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதனால் பையன் இந்தப் பணத்தை எறிய மறுத்து கிட்டத்தட்ட அழுதான்.


மகன் அழுது கொண்டே தன் தந்தையிடம், “அப்பா..!! என் உடல் முழுவதும் வலிக்கிறது. என் முதுகில் தடிப்புகள் உள்ளன, நீங்கள் பணத்தை கிணற்றில் எறியச் சொல்கிறீர்கள்” என்றான்.

தந்தை சிரித்துக் கொண்டே, “கடின உழைப்பின் பலன்கள் வீணாகும்போதுதான் வலியை உணர முடியும். முன்பு உன் அம்மாவிடமிருந்தும் தாத்தாவிடமிருந்தும் கடின உழைப்பு இல்லாமல் நாணயங்களைப் பெற்றாய், அதனால் கிணற்றில் நாணயங்களை வீசுவதில் உனக்கு எந்த வலியும் இல்லை” என்றார்.

மகன் இப்போது கடின உழைப்பு மற்றும் உழைப்பின் மதிப்பை உணர்ந்தான். அவன் தன் தவறைப் புரிந்துகொண்டான், மதிப்புமிக்க பாடத்திற்காக தன் தந்தைக்கு நன்றி கூறினான்.

நீதி:
சில நேரங்களில் வாழ்க்கையின் சிறந்த பாடங்கள் கடினமான சூழ்நிலைகளிலிருந்து வருகின்றன. நம்மில் பலர் கடின உழைப்பே இல்லாமல் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். பல குடும்பங்களில் இந்த நிலைமையே.. தன் பொறுப்பு உணர்ந்து வாழ வேண்டும். இது குடும்பங்களில் மிக முக்கியம்.