எது எனது??? | அருட்சகோதரி பிரைடா SSAM | veritas Tamil


எது எனது???

ஒரு நாள் சிறுவன் ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தார் முதியவர் ஒருவர். சிறுது நேரத்திற்கு பின், சிறுவன் அந்த முதியவரிடம் உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்டான். அவரோ, வானமே என் கூரை என்றார். பிள்ளைகள் எங்க என்று சிறுவன் கேட்க உலகம் என் உறவு என்று கூறினார். புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. தம்பி நீயும் நானும் வாழும் இந்த உலகில் எதுவும் நமதல்ல. எல்லாம் நமக்கு முன்பே உள்ளவை. அதில் சிலவற்றை நாம் நமதாக்குகிறோம். அவ்வளவு தான் என்றார்.    
காற்றும் எனதல்ல காடும் எனதல்ல.
வானும் எனதல்ல வயல்வெளியும் எனதல்ல
ஊற்றும் எனதல்ல உயிரும் எனதல்ல
ஒளியும் எனதல்ல இருளும் எனதல்ல, எதுவுமே எனதல்ல....
அண்டத்தில் வாழும் பிண்டம் எதுவும் எனதல்ல, ஆனால் நாம் தான் எல்லாம் எனது என்று சொல்லிக் கொள்கிறோம் என்று பதிலளித்தார். 

மனிதன் பிறந்த முதல் நாளிலிருந்து இறக்கும் நாள்வரை பல பொருட்களை, மனிதர்களை தனது சொந்தமாக நினைத்துக் கொள்கிறான். " எதுவும் எனதல்ல. என்னிடம் உள்ளதெல்லாம் எனக்கென்று சிறிது காலத்திற்கு என்று கொடுக்கப்பட்டவையே. உண்மையில், நமது எனச் சொல்லிக்கொள்ளும்  பணம், சொத்து, புகழ் அனைத்தும் நாளை இழக்கப்படக்கூடியவை. உடலும் இப்போது நமக்கு சொந்தமாக இருப்பதுபோல தெரிந்தாலும், அதுவும் நமதல்ல. நாம் கொண்டிருக்கும் உறவுகளும் காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ப மாறுபடக்கூடியது.  
இன்று எனது என்று சொல்வதெல்லாம்
நாளை யாருக்கோ சொந்தமாகும்.
பணம்இ பதவிஇ புகழ் எல்லாம்,
பொழுது போனால் பறந்து போகும்.
இன்னும் சிலர் சொல்லலாம்......
இது என் வீடு,
இது என் வாகனம்"
இது என் பணம்"
இது என் இடம்" என்று, ஆனால் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் தெரியும் எதுவும் நமதல்ல. எதுவும் நம்முடன் வரப்போவதும் இல்லை. மாவீரன் அலெக்சாண்டரின் இறப்புக்கு பின் சவப்பெட்டியின் வெளியே திறந்த நிலையில் விரித்து வைக்கப்பட்ட அவரின் கைகள் இதைத் தான் சொல்லாமல் செல்கின்றன.  

எனவே நண்பா! வாழும் வரை வாழுவோம். நமது எனச் சொல்லும் அனைத்தையும் பாதுகாப்போம். நமது என நாம் சொல்லிக்கொண்ட அனைத்தும் நம்முடையது அல்ல என்ற நிதர்சனமான உண்மையை ஏற்றுக்கொள்வோம்.  உலகிற்கு நம்மை கொண்டு வந்த ஆன்மா மீண்டும் நம்மை கொண்டு  சேர்க்கும் வரை அன்பை வாழ்வாக்குவோம். 

 

எழுத்து

அருட்சகோதரி பிரைடா SSAM