சிறார் பாதுகாப்புக்கான போன்டிஃபிகல் ஆணையத்துடன் திருத்தந்தை பதினான்காம் லியோ சந்திப்பு.

வத்திக்கானில் வியாழக்கிழமை காலை, சிறுவர்களை பாதுகாக்கும் பாண்டிபிக்கல் ஆணைய உறுப்பினர்களுடன் திருத்தந்தை லியோ XIV சந்திப்பு நடத்தினார்.இந்த சந்திப்பின் போது, சிறுவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடி நபர்களை தவறான நடத்தை மற்றும் மீறல்களிலிருந்து பாதுகாப்பதற்கான திருச்சபையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
திருத்தந்தை நேரடி தொடர்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, திருச்சபைக்குள் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆணையம் நேரடியாக தம்மிடம் அறிக்கை வழங்குவதைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இந்தக் கூட்டம், நல்ல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடந்தது. இவை முன்னாள் திருத்தனத்தை ஃப்ரான்சிஸ் தொடங்கியவையாகும்; அவர், குற்றங்களுக்கான கோட்பாட்டுத் துறை (Dicastery for the Doctrine of the Faith)யுடன் இந்த ஆணையத்தை ஒருங்கிணைத்தார். அப்போது இருந்த முன்னாள் திருத்தந்தை ஃப்ரான்சிஸ், ஆணையம் தனது முக்கிய பணிகளைச் செயல்படுத்தும் வகையில் சுதந்திரத்தை வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்றும், குருக்களிடையிலான பாலியல் தவறுகளுக்கு எதிராக சண்டையிட அது அவசியம் என்றும் கூறினார். மேலும், உறுப்பினர்கள் நேரடியாக தமக்கே அறிக்கையிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த சந்திப்பின் போது, சிறுவர்களையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் அனைத்து பரிமாணங்களிலும் முழுமையாக பாதுகாப்பதற்கான முயற்சிகளை உறுதியாக செய்ய, தம்முடன் நேரடி தொடர்பைத் தொடருமாறு ஆணையத்திடம் திருத்தந்தை லியோ XIV கேட்டுக்கொண்டார்.
தவறான நடத்தைகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள திருச்சபை பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில், இந்த பாதுகாப்பு ஆணையத்தின் அமைப்பும், மதச்சட்டங்களை (canon law) புதுப்பித்ததும், ஆயர்கள் செய்த தவறுகள் மற்றும் மீறல்களை புகாரளிக்க அமைந்துள்ள விதிமுறைகளும், சில நாடுகளில் பொதுப் பொறுப்பாளர்களிடம் கட்டாயமாக புகாரளிக்க வேண்டிய கட்டாய விதிகளும், மேலும் பல தேசிய அளவிலான வழிகாட்டுதல்களும் பாதுகாப்பு நெறிமுறைகளும் இடம்பெறுகின்றன.ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மேல் பலவகையான நிலைகளில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாகவும், ஆணையம் குறிப்பிட்டது.
அருட்தந்தையர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை எதிர்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பாண்டிபிக்கல் ஆணையத்தை முதலில் நிறுவியவர் திருத்தந்தை ஃப்ரான்சிஸ் ஆவார். கடந்த சில ஆண்டுகளில், இந்த ஆணையின் பொறுப்புகள் விரிந்து வளர்ந்துள்ளன. உலகளவில் திருச்சபையின் பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பீடு செய்யும் ஆண்டுச் அறிக்கையை உருவாக்குவதும், மேலும் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காண்பதும் இதில் அடங்கும்.
2023 ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கை, 2024 அக்டோபர் 29ஆம் தேதி ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், உலகின் பல்வேறு இடங்களிலுள்ள உள்ளூர் திருச்சபைகள் மற்றும் கண்டங்களின் நிலைமைகள், ரோமன் குரியா (Roman Curia) பாதுகாப்பு முயற்சிகளில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது, திருச்சபை சமுதாயத்தில் பாதுகாப்பை எப்படி ஊக்குவிக்கிறது என்பதும், மேலும் இந்த ஆணை எப்படி பொறுப்புக்கூறலுக்கான ஒரு கருவியாக செயல்படுகிறது என்பதும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Daily Program
