தொண்டு என்பது பொதுமக்களுக்கு தன்னலமின்றி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படும் சேவைகள். அதற்கு கூலி தொண்டர்களின் மனமகிழ்ச்சி ஒன்று தான். மாறாக, பட்டமும் பதவிகளும் அல்ல.
பேதுருவைப் போல வருந்தி வருவோரை கைத்தூக்கிவிட்டு, பணியில் அமர்த்துகிறவர் ஆண்டவர் இயேசு என்பதை மனதில் கொள்வோம். இயேசுவின் இறைமக்களை அன்பு செய்து பெணிகாக்க அவருக்கு பணியாளர்கள் தேவை.
நிறைவாக, இயேசுவின் இன்றைய நற்செய்தியில்யில், அவர் தனது தந்தையுடன் கொண்டுள்ள ஒன்றிப்பைப்போல, நாம் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் நாமும் தந்தையாம் கடவுளோடு ஒன்றித்திருக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.