அமைதியின் தூதனாய்

ஆண்டவரே உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும். எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும் எங்கு மனவருத்தம் உள்ளதோ, அங்கு மன்னிப்பையும் எங்கு சந்தேகம் உள்ளதோ, அங்கு நம்பிக்கையையும் எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும் எங்கு துன்பம் உள்ளதோ, அங்கு இன்பத்தையும் நான் பரப்ப அருள்தாரும்.

நான் என் ஆறுதலுக்காக அலைவதை விட்டு, ஆறுதலைக் கொடுக்க உழைப்பேனாக. என்னை மற்றோர் பரிந்துகொள்ளவேண்டும் என்று நடப்பதை விட்டு, மற்றவர்களைப் பரிந்துகொள்ள உழைப்பேனாக.

என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்று தவிப்பதை விட்டு, மற்றவர்களை நேசிக்க முற்படுவேனாக.

ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ளமுடியும். மன்னிப்பதன் மூலந்தான் மன்னிப்படைய முடியும். சாவதின் மூலம்தான் முடிவில்லாத வாழ்வில் பிறக்க முடியும் -ஆமென்.